Muharram 2022: நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை

Muharram 2022: உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2022, 02:30 PM IST
  • நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை.
  • நாகூர் தர்கா நிர்வாகத்தினரின் ஒரு தரப்பு சார்பாக முஹர்ரம் பண்டிகையை ரத்து செய்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
  • நாகூர் தர்கா நிர்வாகத்தின் டிரஸ்டிகளுள் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் காவல்துறையின் தடையை மீறி முஹர்ரம் பண்டிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.
Muharram 2022: நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை  title=

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கோட்டாட்சியரின் தடையை மீறி பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது. உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்காவில் வருடாவருடம் முஹர்ரம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனிடையே நாகூர் தர்காவின் புதிய நிர்வாகத்தில் இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதால், இவ்வாண்டு முஹர்ரம் பண்டிகையை யார் நடத்துவது என சர்ச்சை எழுந்தது. 

இந்த நிலையில் பாரம்பரிய முறைப்படி வருடாவருடம் முகரம் பண்டிகையை நடத்தி வந்த தர்கா நிர்வாகிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் துவா செய்வது குறித்து நாகை கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தார். புகாரை விசாரித்த நாகை கோட்டாட்சியர் முருகேசன், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், தர்கா உள்ளேயே முஹர்ரம் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தினார். 

இதனால் நாகூர் தர்கா நிர்வாகத்தினரின் ஒரு தரப்பு சார்பாக முஹர்ரம் பண்டிகையை ரத்து செய்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு, அங்கு மாவட்ட காவல்துறை சார்பாக போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது. 

 

மேலும் படிக்க | இந்தியாவிலேயே இப்படி செய்வது மு.க.ஸ்டாலின் மட்டும் தான்! ஈபிஎஸ் சாடல்! 

இந்த நிலையில், நாகூர் தர்கா நிர்வாகத்தின் டிரஸ்டிகளுள் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் காவல்துறையின் தடையை மீறி முஹர்ரம் பண்டிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். நாகூர் தர்கா உள்ளே அமைந்துள்ள யாஹுசைன் பள்ளி வாசலில் நடைபெற்ற முஹர்ரம் சிறப்பு துவாவில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமாக நடந்து வந்த விழாவை புதிய நிர்வாகம் தடுக்க நினைப்பதாகவும், இன்று மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு முஹர்ரம் பண்டிகை நடந்து வருவதாக தர்கா நிர்வாகிகளுள் ஒருவரான கலீஃபா மஸ்தான் சாஹிப் தெரிவித்தார். 

கோலாகலமாக நடைபெற்ற முஹர்ரம் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் நாகூர் தர்காவில் குவிந்து வரும் நிலையில், நிர்வாகிகள் மத்தியில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக தர்காவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. 

மேலும் படிக்க | ஏரியாவுக்கு வரச்சொல்லுங்கள் - அமைச்சர் பிடிஆருக்கு சவால் விட்ட செல்லூர் ராஜு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News