இரண்டாவது நாளாக போராட்ட களத்தில் செவிலியர்கள்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் சென்னையில் இரண்டாவது நாள் போராட்டம் நடத்தி வருகிறனர்.

Last Updated : Nov 28, 2017, 11:38 AM IST
இரண்டாவது நாளாக போராட்ட களத்தில் செவிலியர்கள் title=

சென்னை அண்ணாசாலையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, செவிலியர் கோரிக்கைகள் தொடர்பாக வரும் 4-ம் தேதி சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Trending News