மதுரை அப்போலோ-வில் இருந்து கவிஞர் வைரமுத்து டிஸ்சார்ஜ்!

உணவு ஒவ்வாமை பிரச்னை காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!

Last Updated : Oct 20, 2018, 04:53 PM IST
மதுரை அப்போலோ-வில் இருந்து கவிஞர் வைரமுத்து டிஸ்சார்ஜ்! title=

உணவு ஒவ்வாமை பிரச்னை காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!

கடந்த சில தினங்களாக #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. ஹாலிவுட்டில் பிரபலமாக துவங்கிய இந்த விவகாரம் கடந்த ஒருமாத காலமாக தமிழகத்தை உலுக்கி வருகின்றது. 

தமிழகத்தில் முதன்முறையாக #MeToo விவகாரத்தில் சிக்கியவர் கவிஞர் வைரமுத்து அவர்கள் தான். இவர் மீது பாடகி சின்மயி முதன்முறையாக பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டினை சட்டப்பூர்வமாக எதிர்க்கொள்ள தயாராக உள்ளதாக கவிஞர் தெரிவித்துள்ளார்.

இவரைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக், இயக்குநர் சுசி கனேசன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 

இந்நிலையில் நேற்றைய தினம் கவிஞர் வைரமுத்து அவர்கள் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவு ஒவ்வாமை பிரச்னை காரணமாகவும், ரத்த அழுத்தம் காரணமாகவும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News