Covid Restrictions over: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 7 மார்க்கெட்கள் நாளை மீண்டும் திறக்கிறது

கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்புக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 8, 2021, 09:48 PM IST
  • கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னையில் நெரிசல் மிகுந்த 7 சந்தைகள் மூடப்பட்டன
  • அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன
  • ஆகஸ்ட் 9 வரையிலான தடை நாளைக் காலை 6 மணிக்கு அகலுகிறது
Covid Restrictions over: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 7 மார்க்கெட்கள் நாளை மீண்டும் திறக்கிறது   title=

சென்னை: கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்புக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

ஆனால்,  கொரோனா மூன்றாம் அலை வரும் என்ற முன்னெச்சரிக்கைகளுக்கு மத்தியில் மக்களின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்பதற்காக ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டன.

பல இடங்களில் மக்கள் பெரும்திரளாக கூடுவதால் கொரொனா பரவும் அபாயம் அதிகரித்திருப்பதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்ப்பு உத்தரவிட்டிருந்தது.  

அதையடுத்து, ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை மக்கள் அதிகம் கூடும் நகரத்தின் 7 மார்க்கெட் பகுதிகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிரிருந்தது.  

டி நகர், பாரிஸ் கார்னர், புரசைவாக்கம், அமாஞ்சிக்கரி, திருவல்லிக்கேணி, ரெட் ஹில்ஸ், திரு வி க நகர், ராயபுரம் ஆகிய சந்தைப் பகுதிகள் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 8 வரை மூடப்பட்டிருந்தன. நாளைக் காலை 6 மணியுடன் இந்த உத்தரவு காலாவதியாவதால், இந்த சந்தைகள் நாளை முதல் இயங்கும்.

கொத்தவால் சாவடி மார்க்கெட் செயல்படவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுக்கும் தொழிற்சங்கங்கத் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Also Read | Tamil Nadu Police: இனி காவல்துறையினருக்கும் வார விடுமுறை; நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 241 பேருக்கும், சென்னையில் 187 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று சென்னையில் 194 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.  

தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,75,308 ஆக அதிகரித்துள்ளது.

Also Read | Covid Updates ஆகஸ்ட் 8 தமிழகத்தில் இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு; 28 பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News