ஜெயலலிதா மரணம்: உயிர் இழந்த குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி

Last Updated : Dec 19, 2016, 04:48 PM IST
ஜெயலலிதா மரணம்: உயிர் இழந்த குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி title=

ஜெயலலிதா மரணத்தால் உயிர் இழந்த குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி என அதிமுக தலைமைக்கழகம் கூறியுள்ளது.

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பற்றிருந்தார். கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணமடைந்தார். இந்த செய்தியை கேட்டு பலர் துக்கம் தாளாமல் 597 பேர் உயிர் விட்டனர் என்றும், அவர்கள் குடும்பத்திற்கு தல ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என அதிமுக தலைமைக்கழகம் கூறியுள்ளது.

அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரிவை தாங்காமல் 597 பேர் உயிர் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் அதிமுக தலைமைக்கழகம் தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது.

 

 

Trending News