போக்கு,,,ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை: எடப்பாடி அறிவிப்பு!!

போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை பொங்கலுக்கு முன்பாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.  

Last Updated : Jan 10, 2018, 01:13 PM IST
போக்கு,,,ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை: எடப்பாடி அறிவிப்பு!! title=

தமிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடரில், போக்குவரத்து ஊழியர்களின் நிலுவை தொகை ரூ.750 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அத்துடன் எம்.எல்.ஏ -களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் பழனிசாமி, போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக 750 கோடி ரூபாயினை பொங்கலுக்கு முன் வழங்கும் என்றார்.

மேலும், பொது மக்களின் நலன் கருதி, வேலைநிறுத்தத்தை கைவிட்டு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News