பனிச்சரிவில் உயிரிழந்த தமிழக ராணுவ குடும்பத்துக்கு நிதியுதவி- ஓபிஎஸ்

Last Updated : Jan 28, 2017, 02:11 PM IST
பனிச்சரிவில் உயிரிழந்த தமிழக ராணுவ குடும்பத்துக்கு நிதியுதவி- ஓபிஎஸ் title=

காஷ்மீர் மாநிலம் குரேஷ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் குரேஷ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, ராணுவ வீரர்கள் பலர் புதையுண்டனர். இதில், 21 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மற்றும் மதுரையை சேர்ந்த்த இளவரசன் மற்றும் சுந்தர் பாண்டியன் ஆகிய இரு வீரர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த இரு ராணுவ வீரர்களுக்கும், தமிழக அரசு சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Trending News