மரணத்தில் சந்தேகம்.. சிபிசிஐடி விசாரணை வேண்டும்.. உறவினர்கள் சாலை மறியல்!

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Shiva Murugesan | Last Updated : Nov 24, 2021, 11:41 AM IST
மரணத்தில் சந்தேகம்.. சிபிசிஐடி விசாரணை வேண்டும்.. உறவினர்கள் சாலை மறியல்! title=

குற்றச் செய்திகள்: கள்ளக்குறிச்சி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனும், ஆற்றில் சடலமாக சிறுமியும் மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சிறுவனின் மரணத்திற்கு நீதி கேட்டும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற கூறியும் சிறுவனின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்து வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம்  சோமண்டார்க்குடி கோமுகி ஆற்றுப்பகுதியில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையிலும் சிறுமி ஆற்றில் சடலமாக நேற்று மீட்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரியும், சிறுவனின் உறவினர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ALSO READ |  மதுரை அருகே மர்மக்காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழப்பு: பீதியில் பொதுமக்கள்!

இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது சிறுமியின் உறவினர்கள் சிறுவனை அடித்து கொலை செய்துள்ளதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

road block in kallakurichi collector office

முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மற்றும் சிறுமி இருவரும் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது தங்கையை காணவில்லை, என சிறுமியின் அண்ணன் விஜயகுமார் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் கடந்த 21-ஆம் தேதியன்று புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சோமண்டார்குடி கோமுகி ஆற்றில் சிறுமி சடலமாக மிதப்பதாக அதற்கு அருகாமையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் உடல் இருப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ALSO READ |  கொலையா? தற்கொலையா? தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனும், சிறுமியும் சடலமாக மீட்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவகர்லால் தலைமையிலான போலீசார் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சிறுமியின் சடலத்தை தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News