அசானி புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் பெருமழை: நிபுணர்கள் எச்சரிக்கை

Tamil Nadu Weather Update: நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “அசானி”  தீவிர புயல் இன்று காலை 08:30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  நிலவுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 10, 2022, 01:14 PM IST
  • தமிழ்நாட்டில் அசானி புயல் காரணமாக சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
  • வானிலை ஆய்வு மையம் அறிக்கையை வெளியிட்டது.
  • குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அசானி புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் பெருமழை: நிபுணர்கள் எச்சரிக்கை title=

நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “அசானி”  தீவிர புயல் இன்று (10.05.2022) காலை 08:30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  நிலவுகிறது. இது இன்று இரவு வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு  ஆந்திரா கடற்கரையை ஒட்டிய  மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக் கூடும். 

அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் வடஆந்திரா -ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும். இதைத்தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை அய்வு மையம் வெளியிட்டுள்ளது.

10.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

11.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12.05.2022 முதல் 14.05.2022 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யக்கூடும். 

மேலும் படிக்க | ’சட்டென்று மாறிய வானிலை’ மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  

ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) தலா 5,நந்தியார் (திருச்சி), லால்குடி (திருச்சி), தென்பரநாடு (திருச்சி), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), புடலூர் (தஞ்சாவூர்) தலா 4, திருப்பத்தூர் (திருப்பத்தூர்), புள்ளம்பாடி (திருச்சி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), மேலத்தூர் (வேலூர்), ஆத்தூர் (சேலம்), கரியகோவில் (சேலம்) தலா 3, தேவிமங்கலம் (திருச்சி), சமயபுரம் (திருச்சி), துவாக்குடி (திருச்சி), எண்ணூர் AWS (திருவள்ளூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), வெட்டிகாடு (தஞ்சாவூர்), குருங்குளம் (தஞ்சாவூர்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), குடியாத்தம் (வேலூர்), திருவையாறு (தஞ்சாவூர்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), வாணியம்பாடி (திருப்பத்தூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) தலா 2, ஹரூர் (தர்மபுரி), கூடலூர் (தேனி), சீர்காழி (மயிலாடுதுறை), தரமணி ARG (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), திருமானூர் (அரியலூர்), நன்னிலம் (திருவாரூர்), வீரகனூர் (சேலம்), வலங்கைமான் (திருவாரூர்), போளூர் (திருவண்ணாமலை), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), தம்மம்பட்டி (சேலம்), எறையூர் (பெரம்பலூர்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), பாடலூர் (பெரம்பலூர்), திருவாரூர் (திருவாரூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), தேவாலா (நீலகிரி) , செட்டிகுளம் (பெரம்பலூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :   

10.05.2022: மத்திய மேற்கு  வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சூறாவளி காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மத்திய மேற்கு  வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
கேரள மற்றும் லட்சதீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

11.05.2022: மத்திய மேற்கு  வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஒரிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய  மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.05.2022: வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு  வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வானிலை நிலவரம் பற்றிய மேலும் விவரங்களுக்கு  imdchennai.gov.in என்ற இணையதளத்தை காணவும்.

மேலும் படிக்க | ஊட்டி போல மாறிய சென்னை : காரணம் இதுதான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News