வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக புதிய சிலை!

வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது!

Last Updated : Aug 26, 2019, 12:33 PM IST
வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக புதிய சிலை! title=

வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது!

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இளைஞர் மீது கார் மோதியது தொடர்பாக இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில், அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. மேலும், கார் ஒன்றும் தீவைத்து எரிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருதரப்பை சேர்ந்த 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதனிடையே அம்பேத்கர் சிலை உடைப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை ஏற்பட்டு, உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக, அரசு சார்பில் இன்று புதிய அம்பேத்கர் சிலை நிறவப்பட்டுள்ளது.

Trending News