ஓராண்டுக்குள் தமிழகத்தில் 825 மின்சார பேருந்துகள் -MR விஜயபாஸ்கர்!

சேலத்தில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பயன் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அன்பழகன், சரோஜா மற்றும் சேலம் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

Last Updated : Sep 22, 2019, 08:07 PM IST
ஓராண்டுக்குள் தமிழகத்தில் 825 மின்சார பேருந்துகள் -MR விஜயபாஸ்கர்! title=

சேலத்தில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பயன் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அன்பழகன், சரோஜா மற்றும் சேலம் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஆயிரத்து 93 கோடி ரூபாய் பணப் பயன் ஒரே தவணையாக வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு பேசினார்.

22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு ஒரு கோடியே 25 லட்சம் பயணிகள் பயன் பெற்று வருவதாகவும் இந்திய அளவில் தமிழகத்தில் தான் பெரிய அளவில் பொதுப் போக்குவரத்து சேவை அரசால் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கப் தெரிவித்துள்ளார்.

மேலும், 300 புதிய மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் இன்னும் இரண்டொரு நாட்களில் கையெழுத்து ஆகும் என்றும், இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் 825 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற பணியாளர்கள் 892 பேருக்கு பணி ஓய்வு பணப்பலன்கள் வழங்கும் விழா கரூரில் நடந்தது. இதில் 892 பேக்கு ரூ.219.80 கோடி மதிப்பிலான பணப்பலன் காசோலைகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கி பேசினார். 

அப்போது அவர் தெரிவிக்கையில்., மிக விரைவில் சென்னையில் 50 ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட உள்ளது. குறைவான தூரம் செல்லக்கூடிய பஸ்களும் விரைவில் ஏ.சி. பஸ்களாக இயக்கப்பட உள்ளது. சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வகையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த கே.எப்.டபிள்யூ. என்ற வங்கியின் மூலம் மிகக்குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவி பெற்று 2 ஆயிரம் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 820 மின்சார பஸ்கள் ஓராண்டிற்குள் தமிழகத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

Trending News