Tasmac கடைகள் நாளை திறக்கப்படும்: வெளியிடப்பட்டன வழிகாட்டு நெறிமுறைகள்

தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பட்டவுள்ள நிலையில், இதற்கான 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 13, 2021, 11:48 AM IST
  • 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • நாளை காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பட்டவுள்ளன.
  • டாஸ்மாக் கடைகளுக்கான 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Tasmac கடைகள் நாளை திறக்கப்படும்: வெளியிடப்பட்டன வழிகாட்டு நெறிமுறைகள்  title=

Guidelines for Tasmac Shops in Tamil Nadu: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கில் இருந்ததை விட சில அதிகமாக தளர்வுகள் நாளை முதல் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை (Tasmac Shops) திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பட்டவுள்ள நிலையில், இதற்கான 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
இந்த நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

- மதுபானம் வாங்க டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் கொரோனா நெறிமுறைகளை (Corona Guidelines) பின்பற்ற வேண்டும்.

- மதுபானம் வாங்க வருவோர் 6 அடி தனி மனித இடைவெளியை பின்பற்ற வெண்டும்.

- டாஸ்மாக் கடைகளின் எல்லைக்குள் ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டங்கள் வரையப்பட்டு அதில் வாடிக்கையாளர்கள் நிற்க வேண்டும்.

ALSO READ: TASMAC திறப்பு: இது தான் விடியலா.. வானதி சீனிவாசன் கேள்வி

- டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

- கடைகளை திறக்கும்போதும், மூடும்போதும், கடையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

- டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் போடப்பட்டிருக்க வேண்டும். 

- யாருக்கும் மதுபான பாட்டில்கைன் மொத்த விற்பனை செய்யக்கூடாது.

- டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் கண்டிப்பாக மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும்.

முன்னதாக, ஊரடங்கு (Lockdown) காரணமாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. தமிழகத்தில் மொத்தமாக சுமார் 432 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் பணிகளும் அரங்கேறி வருகின்றன. சட்டவிரோதமாக இப்படி காய்ச்சப்படும் சாராயத்தால் பலரது உயிருக்கும் ஆபத்து வருகிறது. கள்ளச்சாராயத்தை காய்ச்சுபவர்களை பிடிப்பதில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறந்திருப்பதால், தமிழ்நாட்டிலிருந்து  பலர் அங்கிருந்து மதுபான பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து அதை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இப்படி பதுக்கி வைக்கப்படும் மதுபான பாட்டில்களை போலீசார் கைப்பற்றி வருகின்றனர். இதில் ஈடுபடுள்ள பலர் கைதாகியும் உள்ளனர்.

ALSO READ: Tasmac: டாஸ்மாக் திறப்புக்கு எதிராக BJP ஜூன் 13 ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News