ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு எதிராக முறையீடு...

வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு....

Last Updated : Feb 13, 2019, 11:26 AM IST
ஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு எதிராக முறையீடு... title=

வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு....

ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு எதிராக முறையீடு - உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை. 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு. மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கஜா புயல் மற்றும் வறட்சி காரணமாக தொழிலாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் 60 லட்சம் பேர் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் திட்டம் என்று கூறியும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

 

Trending News