விஜயகாந்த்: ரசிகர்கள் மீது உயிரையே வைத்திருந்தார் என பாக்யராஜ் நெகிழ்ச்சி

Vijaykanth: தீவுத் திடலில் வைக்கப்பட்டிருக்கும் நடிகர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் பாக்யராஜ், ரசிகர்கள் மீது விஜயகாந்த் உயிரையே வைத்திருந்ததாக உருக்கமாக கூறினார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 29, 2023, 01:12 PM IST
  • கண்கலங்க அஞ்சலி செலுத்திய குஷ்பூ, பாக்யராஜ்
  • நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என குஷ்பூ உருக்கம்
  • ரசிகர்கள் என்றால் விஜயகாந்துக்கு உயிர் என பாக்யராஜ் நெகிழ்ச்சி
விஜயகாந்த்: ரசிகர்கள் மீது உயிரையே வைத்திருந்தார் என பாக்யராஜ் நெகிழ்ச்சி title=

சென்னை தீவுத் திடலில் வைக்கப்படிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ், நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர் மத்தியில் பேசிய அவர், “விஜயகாந்த் அவர்களை வைத்து சொக்கத்தங்கம் படத்தை இயக்கியபோது, அவர் என்னிடம், ‘அண்ணே எனக்காக ஒன்னே ஒன்னு விட்டுக் கொடுக்கணும்’னு கேட்டார். நான் என்னவென்றேன். ‘அவுட்டோர்ல சூட்டிங் எடுக்கும்போது ஞாயிற்றுக் கிழமை ஒருநாள் எனக்காக அன்றைக்கு மட்டும் சூட்டிங் வேண்டாம். நான் அன்றைக்கு ரசிகர்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும். அவர்களோடு மதியம் வரை இருந்து அவர்களை மதியம் சாப்பிட வைக்கணும்’ என சொன்னார். 

மேலும் படிக்க | மிஸ் யூ கேப்டன்! கருப்பு MGR விஜயகாந்தை போலவே சினிமாவிலும் அரசியலிலும் தடம் பதித்த நடிகர்கள்

அந்த அளவுக்கு அவரு ரசிகர் மன்றத்தை உயிராக மதித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடை வளர்ச்சி கண்கூடாக தெரிந்தது” என்று பேசினார். அவரை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்துக்கு நடிகை குஷ்பூ கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு பேசிய நடிகை குஷ்பூ, " விஜயகாந்த்தின் இழப்பு, எங்கள் வீட்டில் ஒருவரை இழந்தது போல் உள்ளது. நாங்கள் எப்போதும் படப்பிடிப்பு தளத்திலும், சாலிகிராமம் வீட்டிலும் ஏதேனும் பிரச்னை என்றால் கேட்பதற்கும், தைரியம் கூறுவதற்கும் ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வை எப்போதும் கொடுப்பவர். அவர் நம் மத்தியில் இல்லை என்று எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனெனில் அவர் நம் அனைவர் மனதிலும் இருக்கிறார். 

ஒருவர் இருக்கும் போது அவரது அருமை தெரியாது. அவர் சென்ற பின் தான் தெரியும். இந்த கூட்டம் ஒரு நடிகருக்கோ, அரசியல் தலைவருக்கோ அல்ல.. ஒரு நல்ல மனிதருக்காக…” என்று கண்ணீர் ததும்ப பேசினார். முன்னதாக விஜயகாந்த் முகத்தை பார்த்து தேம்பி அழுத குஷ்பூ, பிரமேலதா விஜயகாந்த் கட்டித் தழுவி தன்னுடைய இரங்கலையும், விஜயகாந்த் மீது வைத்திருந்த அன்பையும் வெளிப்படுத்தினார். குஷ்பூ கண்ணீர்விட்டு அழும்போது, அங்கு குழுமியிருந்த ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். 

மேலும் படிக்க | விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்-செருப்பை தூக்கியடித்த மர்ம நபர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News