தீவுத் திடல் டூ கோயம்பேடு: கேப்டன் விஜயகாந்த் இறுதியாக சென்னை வீதியில் பயணித்த வழி

கலை உலகை கட்டி ஆண்ட கருப்பு எம்ஜிஆர், புரட்சி கலைஞர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் இறுதியாக சென்னை வீதியில் பயணித்து கோயம்பேட்டில் இருக்கும் அவரின் தேமுதிக கட்சி தலைமையகத்தில் துயில் கொண்டார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 29, 2023, 03:36 PM IST
  • கேப்டன் விஜயகாந்த் இறுதி பயணம்
  • தீவுத் திடலில் இருந்து புறப்பட்ட வாகனம்
  • கோயம்பேடு வந்து துயில்கொண்ட உடல்
தீவுத் திடல் டூ கோயம்பேடு: கேப்டன் விஜயகாந்த் இறுதியாக சென்னை வீதியில் பயணித்த வழி title=

அதிரடி கதாநாயகனாக அறிமுகமாகி, அன்பால் ரசிகர்களை கட்டியாண மாபெரும் கலைஞன் விஜயகாந்த். கருப்பு நிறத்தை வெறுத்த சினிமாவில் திரைத்துறையில், கருப்பு கதாநாயனாக உயர்ந்து கோடம்பாக்கத்தை கட்டியாண்ட திறமைசாலி. உழைப்பு மூலம் திரைத்துறையின் உட்சத்தை தொட்டவர். தன்னை தேடி வந்தோரை அன்பாலும், அண்ணிமிட்டும் அரவணைத்த அவர், கடைசி ஒருமுறை சென்னை வீதியில் பயணித்தார். நேற்று மறைந்த அவரின் பூத உடல் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க | மிஸ் யூ கேப்டன்! கருப்பு MGR விஜயகாந்தை போலவே சினிமாவிலும் அரசியலிலும் தடம் பதித்த நடிகர்கள்

காலை முதலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், குஷ்பூ, ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் அலை அலையாக வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் அலைகடலென திரண்டு வந்து ஆயிரக்கணக்கில் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது, விஜயகாந்த் உடன் பழகிய நாட்களையும், அவர் செய்த உதவிகளையும் கண்ணீர்மல்க உருக்கமாக நினைவுகூர்ந்தனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் மருத்துவமனையில் இருக்கும்போதுகூட ரசிகர்கள் கூட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடியை களத்தில் இறங்கி கட்டுக்குள் கொண்டு வந்தவர் கேப்டன், அவருக்கு அந்த பெயர் பொருந்தமானது என்று புகழாரம் சூட்டினார்.

இதேபோல் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் வரிசையாக வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து தமிழக அரசு சார்பில் அவருக்கான இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன் தீவுத்திடல் டூ கோயம்பேடு வரை போக்குவரத்து நெரிசல் தவிர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

12 கிலோ மீட்டர் தொலைவுள்ள இப்பயணத்தின் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்து விஜயகாந்துக்கு இறுதி மரியாதையை செலுத்தினர். விஜயகாந்த் இறுதியாக தீவுத்திடலில் இருந்து பல்லவன் சாலையை அடைந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக, அதாவது ஈவெரா சாலை, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, பச்சையப்பன் கல்லூரி, ஸ்கை வாக் வழியாக கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக அலுவலகத்தை அடைந்தது. பல ஆண்டுகளாக சென்னையின் மூலை முடுக்கெல்லாம் சுற்றித் திரிந்த கேப்டனின் பாதங்கள் கடைசியாக அவரின் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் துயில் கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க | விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்-செருப்பை தூக்கியடித்த மர்ம நபர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News