குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபடுவோம் -திரிஷா!

குழந்தைத் தொழிலாளர் முறையை நாட்டில் இருந்து ஒழிப்பதற்காக அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என யுனிசெப் நல்லெண்ண தூதுவர் நடிகை திரிஷா கூறியுள்ளார்! 

Last Updated : Jun 12, 2018, 10:57 AM IST
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபடுவோம் -திரிஷா! title=

குழந்தைத் தொழிலாளர் முறையை நாட்டில் இருந்து ஒழிப்பதற்காக அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என யுனிசெப் நல்லெண்ண தூதுவர் நடிகை திரிஷா கூறியுள்ளார்! 

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகை திரிஷா விழிப்புணர்வு பேரணியில் நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் என யுனிசெப் நல்லெண்ண தூதுவர் நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, சென்னை அண்ணாநகரில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இதில் யுனிசெப் (UNICEF) தூதுவர் நடிகை  திரிஷா கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணியை துவக்கி வைத்தார். அங்குள்ள பூங்காவில் துவங்கிய இந்த பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, தங்களது கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். 

அப்போது பேசிய நடிகை திரிஷா, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை, கொத்தடிமை முறையை தடுத்து நிறுத்தி, குழந்தைகளுக்கான கல்வி தரும் இயக்கமாக யுனிசெப் (UNICEF) விளங்கி வருவதாகவும், குழந்தைத் தொழிலாளர் முறையை நாட்டில் இருந்து ஒழிப்பதற்காக அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

 

Trending News