கணவன் கண் எதிரே தண்ணீரில் மூழ்கி மனைவி மகன் பலி

மனைவி மற்றும் மகன் உடலைக் கைப்பற்றிய வீரகனூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 7, 2022, 09:47 AM IST
கணவன் கண் எதிரே தண்ணீரில் மூழ்கி மனைவி மகன் பலி title=

சேலம் மாவட்டம் பெரிய வீராணத்தைச் சேர்ந்தவர் வினோத் இவர் சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள சொக்கனூர் பகுதியில் உள்ள ஏ .கே .எஸ் செங்கல் சூளையில் தனது மனைவி பப்பிதா உடன் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஆகாஷ் (8) என்ற மகனும், அனுஸ்ரீ (6) என்ற மகளும் உள்ளனர். 

இவர்கள் இருவரும் வீராணம் அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் தற்போது சனி ஞாயிறு பள்ளிக்கு விடுமுறை நாள் என்பதால் இவர்கள் இருவரையும் தந்தை வினோத் வேலைப்பார்க்கும் இடமான சொக்கனூருக்கு அழைத்து வந்துள்ளார். 

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள சுவேத நதி தடுப்பணையில் வினோத் அவரது மனைவி பட்பிதா மகன் ஆகாஷ் மகள் அனுஸ்ரீ ஆகிய 4 பேரும் குளித்துக்கொண்டிருந்த போது ஆற்று பள்ளத்தில் சிக்கி திடீரென மூன்று பேரும் மூழ்கியபோது வினோத் குமார் தனது மகனை மட்டும் காப்பாற்றமுடிந்ததையடுத்து தனது மனைவி பப்பிதா மகன் ஆகாஷ் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் வீரகனூர் போலீசார் மற்றும் கெங்கவல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பப்பிதா ஆகாஷ் ஆகிய இருவரின் சடலைத்தையும் மீட்டனர் பின்னர் உடலைக் கைப்பற்றிய வீரகனூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் கண்முன்னே மனைவி மகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending News