இன்று எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்.

Last Updated : Oct 30, 2017, 01:02 PM IST
இன்று எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்.  title=

சாகித்ய அகாடமி விருது பெற்ற 66 வயதான எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி இன்று காலமானார். 

விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த மேலாண்மை பொன்னுச்சாமி பல்வேறு சிறுகதைகள் மற்றும் நாவல் எழுதியுள்ளார். இவர் இதுவரை 36 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு அவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

நாளை காலை சென்னையில் இவரது இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.

இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Trending News