மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் உயிரிழப்பு.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் பிஆர்டி மெடிக்கல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் மருத்துவமனையும் சேர்ந்து செயல் படுகிறது.
இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்ஸிஜன் பயன் பாட்டிற்க்கான கட்டணத் தொகை ரூ. 67 லட்சம் வழங்கப்படததால், ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 30 குழந்தைகள் உயிரிழந்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் சுரங்கப்பாதையில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் கிழக்குப்பகுதியில் உள்ள குயிங்டோவில் நகரில் இன்று பள்ளிப்பேருந்து ஒன்று சுரங்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அப்பேருந்தில் பயணித்த 10 குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாங்டங் மாகாணத்தின் வெய்ஹாய் என்னும் இடத்தில் தங்கி படித்துவந்த அந்த குழந்தைகள் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு வயது நான்கு முதல் ஏழு வரை மட்டுமே என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் முதல் கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி நடைப்பெற்றது, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படும். முதல் கட்டமாக இன்றும், இரண்டாம் கட்டமாக வரும் 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு இனி அரசு வேலை வழங்கப்படமாட்டாது என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
அசாமில் வறுமையை ஒழிக்கவும், குழந்தைகள் இறப்பை தடுக்கவும் புதிய மக்கள்தொகை கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வோருக்கு இனி அரசு வேலை வழங்கப்படாது.
இன்று தமிழ்நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் முதல் கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படும். முதல் கட்டமாக இன்றும், இரண்டாம் கட்டமாக வரும் 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழ்நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் முதல் கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து நாளை வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக நாளையும், இரண்டாம் கட்டமாக வரும் 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மாண்டுபோகும் 5 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளில் கால்வாசிப்பேரின் மரணத்துக்கு மோசமான சுற்றுச்சூழல் மாசுபாடு தான் காரணம் என உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பாற்ற குடிநீர், சுகாதாரமின்மை, சுகாதாரமற்ற பழக்க வழக்கங்கள், வீடு மற்றும் சுற்றுப்புற மாசுபாடுகள் ஆகியவை தான் பெரும் பங்கு வகிப்பதாய் உலக சுகதார நிறுவனம் தெரிவித்தது.
ஈராக் நாட்டில் பாக்தத்தில் உள்ள யார்மோக் மகப்பேறு மருத்துவமனையில் மின் கோளாறினால் ஏற்பட்ட தீவிபத்தில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் பலியானார்கள். இந்த மருத்துவமனையில் இருந்து 7 குழந்தைகளையும் 29 பெண்களையும் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்கபட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றபட்டு உள்ளனர்.
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்துக்கு தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளால் மிரட்டல் இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில், மட்டும் ஐ.எஸ் அமைப்பினரால் 300-க்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லபட்டு உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.