கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கிடையில், கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இப்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மே 1 முதல் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பிக்க வாய்ப்பில்லை என்று முன்னர் கூறியிருந்தன. ஆனால் கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பிக்கின்றன. இந்த மாநிலங்களுக்கு கூடுதல் தடுப்பூசி அளவுகள் தேவைப்படும்.
இந்தியாவில் தற்போது கோவாக்சின் (Covaxin), கோவிஷீல்டு (Covoshield) ஆகிய இரு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை தயாரிக்கும் நிறுவனங்கள், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான விலைகளை அதிகரித்துள்ளன.
மே 1 முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இந்த நிலையில், தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், தடுப்பூசி மையங்களிலிருந்து கொரோனா தொற்று பரவக்கூடும் என்ற அச்சமும் மக்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் மத்தியில் பரவலாக உள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்திய மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரான போரில் நம்மை பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழியாக கருதப்படுகின்றது. தடுப்பூசி செயல்முறையை அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சந்தைகளில் பணிபுரிபவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மாநிலப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோரிக்சா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு முகாம்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) புதன்கிழமை (ஏப்ரல் 21) தனது தடுப்பூசி கோவிஷீல்டு ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு ரூ. 400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ .600 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண், இன்று காலை 8 மணி வரை, நாட்டில் 10.85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 40 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் வழங்கப்பட்டன என தெரிவித்தார்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து "கோவோவேக்ஸ்" (Covovax) என்ற கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
கோவிட் -19 தடுப்பூசியின் முதல் ஷாட்டை சனிக்கிழமை பெற்ற பிறகு, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா, தடுப்பூசி போட்டுக்கொண்டது சிரமமில்லாமலும், வலியில்லாமலும் இருந்தது என்று கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.