பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் மும்பை சென்ற தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்று கொண்டதை தொடர்ந்து அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கடந்த செப்டம்பர் 9-ம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதன் பின்னர் அவர் மும்பை கிளம்பி சென்றார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தத்தோடு, அவர்களின் குடும்பங்களுக்கும் தலா 3 லட்சம் நிதி உதவி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதைக்குறித்து அரசு இதழில் அறிக்கை வெளியிடப்படுள்ளது. அதில் கூறியதாவது:-
பரபரப்பான தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையில் மும்பை சென்ற தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்று கொண்டதை தொடர்ந்து அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கடந்த செப்டம்பர் 9-ம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதன் பின்னர் அவர் மும்பை கிளம்பி சென்றார்.
நேற்று மாலை வத்தலகுண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில் தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.
அதைக்குறித்து அவர் தனது முகநூலில் கூறியதாவது:-
தி.மு.க. முப்பெரும் விழாவில் முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில், மாநில அளவில் தேர்வான கல்லூரி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பணமுடிப்பு மற்றும் பதக்கங்களை வழங்கினேன்.
தமிழக அரசியலில் பரபரபப்பு நிலவி வரும் நிலையில், அடுத்த வாரம் திங்கள்கிழமை(11-ம் தேதி) தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வருகிறார்.
எடப்பாடி தலைமையிலான அரசு தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி தினகரன் ஆதரவு எம்எல்ஏ மற்றும் திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி வரும் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தமிழகம் வருகை மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
தமிழக அரசியலில் பரபரபப்பு ஏற்பட்டுற்கும் நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசியது,
தமிழக அரசு பெரும்பான்மை நிருபிக்க அவசியம் இல்லை. தமிழக அரசு பெரும்பான்மையுடன் தான் உள்ளது. 134 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு உள்ளது. எதிர்க்கட்சி தேவையில்லாமல் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கிறது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள குடகில் உள்ள பேடிங்டன் சொகுசு ரிசார்ட்டை சுற்றி தமிழக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக(இபிஎஸ் & ஓபிஎஸ்) செயல்பட்டு வந்தது. இந்த இரு அணிகளும் கடந்த மாதம் 21-ம் தேதி ஒன்றாக இணைந்தன. இதனால் அதிமுக துணை பொது செயளார் தினகரன் தலைமையில் புதிய அணி உருவாகியது. இவர்கள் தமிழக முதல்வராக பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கை உட்பட தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தது. இந்த இரு அணிகளும் கடந்த மாதம் 21-ம் தேதி ஒன்றாக இணைந்தன.
இதற்கிடையே அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் தலைமையில் புதிய அணி உருவானது. இந்த அணியால் அதிமுக-வில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது,
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது!
முன்னதாக இந்த பொதுக்குழு கூடத்திற்கு தடை விதிக்க கோரி எம்எல்ஏ. வெற்றிவேல் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவினை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்தது. மாறாக எம்எல்ஏ. வெற்றிவேல்-க்கு நீந்திமன்ற நேரத்தினை வீணடித்த காரணத்திற்காக 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னையில் நீட் தேர்வை ரத்து செயக்கோரி பள்ளி மாணவிகள் தீடீர் சாலைமறியல் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனிதா மரணத்தை அடுத்து கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து பல போராட்டங்கள் அரசியல் கட்சி சார்பிலும், மாணவர்கள் சார்பிலும் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் நீட் தேர்வை ரத்தி செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய வந்த மாணவர்களை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சி.பி.ஐ. மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் மாணவர்களை சந்தித்து பேசினார்கள்.
அவர்கள் மாணவர்களிடையே பேச்சுவாரத்தை நடத்தினார்கள். போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டனர். மு.க ஸ்டாலின் மற்றும் நல்லக்கண்ணு கோரிக்கையை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெற்றனர்.
அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சி.பி.ஐ. மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் மாணவர்களை சந்தித்து பேசினார்கள்.
ஆளும் தமிழக அரசுக்கு 135 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
135 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் தமிழக அரசுக்கு மெஜாரிட்டியில் உள்ளது. சூழ்நிலை காரணமாக சில எம்.எல்.ஏ.,க்கள் நேற்று கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நாங்கள் பதவி ஏற்ற நாள்முதல் எங்கள் மீது ஸ்டாலின் வீணான குற்றம் சாட்டி வருகிறார் என்றார்.
மேலும் நீட் விவகாரத்தில் தமிழக அரசு முழு விலக்கு கோரிவந்தது எனினும் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதுஎன தெரிவித்தார்.
இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வரின் முடிவை ஏற்பதாக அனைத்து எம்எல்ஏக்களும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மாதம் ஆகஸ்ட் 21-ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. இரு அணிகள் இணைந்த பிறகு முதல் முறையாக அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 109 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர்.
இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்த பிறகு கடந்த 28-ம் தேதி இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர். இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை குறித்த ஓ.பி.எஸ் ட்விட்க்கு முதல்வர் இ.பி.எஸ் ரீ-ட்விட் செய்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவினை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மறு பதிவிட்டுள்ளார்.
நிகழ்ச்சி தொடர்பான ட்வீட்கள்:-
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ததை அடுத்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த பயணத்தில் சசிகலா மற்றும் தினகரன் நீக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்தித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.