விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையை திறந்தது தமிழக அரசு

பவானி சாகர் அணையில், நீர்மட்டம் சீராக 101 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, நீர்ப்பாசனத்திற்காக அணையை திறக்குமாறு விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2020, 11:50 AM IST
  • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது.
  • மழை காரணமாக அணையின் நீர்மட்டம் சீராக 101 அடியாக உயர்ந்தது.
  • அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பண்ணன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் அணையைத் திறந்தனர்.
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையை திறந்தது தமிழக அரசு title=

தமிழகத்தில் (Tamil Nadu) கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது. பலத்த மழை காரணமாக பவானி சாகர் அணையில், நீர்மட்டம் சீராக 101 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, நீர்ப்பாசனத்திற்காக அணையை திறக்குமாறு விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்ததன் அடிப்படையில், 105 அடி அதிகபட்ச அளவைக் கொண்ட பவானிசாகர் அணை (Bhavanisagar Dam) திறக்கப்பட்டது. கரூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் விவசாய பயன்பாடுகளுக்காக அணை திறக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் சீராக 101 அடியாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து நீர்ப்பாசனத்திற்காக அணையை திறக்குமாறு விவசாயிகள் அரசாங்கத்தைக் கோரினர். அதற்கு செவி சாய்த்த அரசாங்கம் தற்போது பவானிசாகர் அணையை திறந்துள்ளது.

ALSO READ: விரைவில் தமிழகத்தில் 3,500 நடமாடும் ரேஷன் கடைகள் திறக்கப்படும்: செல்லூர் கே ராஜு!!

பவானிசாகர் அணையில் இருந்து நீர் கீழ்பவானி வாய்க்காலான (Keezhbhavai aqueduct) நீர்வழங்கல் வரை செல்கிறது. கொடிவேரியில் உள்ள நீர் வாயிலிலிருந்து அணை நீர் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை நீர்வழங்கல் பகுதி வரை செல்கிறது. கலிங்கராயன் திறப்பிலிருந்து நீர் கலிங்காராயன் நீர்வழங்கல் பகுதியை அடைகிறது. பல்வேறு வாய்க்கால்கள் வழியாக செல்லும் பவானிசாகர் அணையின் நீர் பல மாவட்டங்களின் விவசாய நீர்ப்பாசனத்திற்கு பெரும் உதவியாக இருக்கிறது.

அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பண்ணன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் அணையைத் திறந்தனர்.

ALSO READ: உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அரசு வெளியீடு

Trending News