தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். அத்துடன் அவர் முதல்வர் ஆக வேண்டும் என்றும் அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை இன்று கூட்டியிருக்கிறார் சசிகலா. எனவே, சசிகலாவை முதல்வர் ஆக்குவதற்கு இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அளித்த பேட்டி:-
எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரின் சிலைக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பற்றி கேட்ட பிறகு குறைந்தது 166 பேர் அதிர்ச்சி காரணமாக இறந்தார் என்று தமிழ்நாடு ஆளும் கட்சி அதிமுக கூறி இருந்தது.
உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அதிமுக தலைமைக்கழகம் முன்பு அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நிதி உதவி வழகினார்.
அதிமுக கழகத்தின் சார்பில் தலா 3,00,000 ரூபாய் குடும்ப நல நிதியுதவியும், தொடர்புடைய விபத்துகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தலா 50,000 ரூபாயும், மொத்தம் 4 கோடியே 99 லட்சம் ரூபாயை வழங்கினார்.
கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவினால் ஜெயலலிதா மரணமடைந்தார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் பொதுச்செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. பிறகு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 4-ம் தேதி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அன்றைய தினம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று சசிகலா 2-வது நாளாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதிமுக கட்சியின் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்காக அதிமுக பொதுக் குழு கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் பதவியுடன் சேர்த்து அதிமுக-வின் தலைமை பொறுப்பும் சசிகலாவிடமே வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட குடியரசுதலைவர் பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சசிகலா நடராஜன் நன்றி கடிதம் எழுதியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.