அமெரிக்க விசா கட்டுபாடு: இந்தியர்களுக்கு சிறப்பு சலுகை

Last Updated : Mar 1, 2017, 02:43 PM IST
அமெரிக்க விசா கட்டுபாடு: இந்தியர்களுக்கு சிறப்பு சலுகை title=

அமெரிக்காவுக்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் தடை விதித்து அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். மேலும் இந்த நாடுகளைப் பொறுத்தமட்டில் தூதரக ரீதியிலான ‘ராஜ்ய விசா’ மட்டும் தொடர்ந்து வழங்கப்படும். மற்றபடி தனி நபர்களுக்கு விசா வழங்கப்படாது என்று குறிப்பிட்டார். ஆனால் டிரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பின் அதிரடி உத்தரவு தொடர்பான விசாரணை நடத்திய நீதிபதி அன் டொனேலே டொனால்டு டிரம்பின் தடை உத்தரவை நிறுத்தி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து விசா நடைமுறைகளை எளிமையாக்க டொனால்டு டிரம்ப் முடிவு செய்தார்.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் தனது முதல் உரையில் டிரம்ப் கூறியதாவது:-

கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இது போன்ற குடியேற்ற முறை அதிகப்படியான டாலர்களை மிச்சப்படுத்துவதோடு பணியாளர்களின் ஊதியத்தையும் உயர்த்தும். 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் கூற்றினை பின்பற்ற வேண்டிய தருணம் இது. தற்போது இருக்கும் குடியேற்ற முறையினை தவிர்த்து புதிய தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறை அமெரிக்காவுக்கு நிறைய டாலர்களை மிச்சப்படுத்தி, பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தும். இது நம் நாட்டிற்கு குடியேறுவோரின் குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

அமெரிக்காவில் மீண்டும் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்க இருக்கிறேன். நம் நாட்டு பணியாளர்களை பாதுகாக்க குடியேற்ற முறைகளை சட்டப்பூர்வமாக மாற்றியமைப்பது அவசியமானதாகும்.

எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறும் இந்திய ஐடி பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமானதாகும். இது தவிர இந்தியாவில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் என உயர் பதவி வகிக்கும் பணியாளர்கள் அதிகம் பேர் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.

இதனால் தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு முறை இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். இதன் காரணமாக பல்வேறு இந்தியர்கள் அமெரிக்கா வருவர் என அவர் தெரிவித்தார்.

Trending News