48 நாடுகள், 2802 இறப்பு, 82,059 பாதிப்பு... உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுநோய்

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறி வருகிறது. இதுவரை 48 நாடுகளில் பரவியது. மேலும் 2,802 இறப்புகள் மற்றும் 82,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 27, 2020, 02:48 PM IST
48 நாடுகள், 2802 இறப்பு, 82,059 பாதிப்பு... உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுநோய் title=

புது டெல்லி: சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது உலகளாவிய தொற்றுநோயின் வடிவத்தை எடுத்துள்ளது. பலரை காவு வாங்கியுள்ள இந்த கொரோனோ வைரஸை உலக சுகாதார நிறுவனம் இன்னும் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கவில்லை என்றாலும், நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.

இந்தியாவுக்கு வருகை தந்த பின்னர் அமெரிக்கா சென்ற அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலில் கொரோனா குறித்து அவசர கூட்டத்தை நடத்தினார். இந்த வைரஸ் இப்போது உலகில் உள்ள 7 கண்டங்களில் 6 ஐ எட்டியுள்ளது, இதுவரை 2802 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவின் அழிவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 29 பேர் இறந்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,744 ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 29 க்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு பேர் வைரஸ் காரணமாக இறந்துள்ளது என்பது இதுவே முதல் தடவையாகும் என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஜனவரி 29 ஆம் தேதி கொரோனா வைரஸ் காரணமாக 26 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நேற்று (புதன்கிழமை) 433 பேருக்கு இந்த தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 24 பேரைத் தவிர, மற்ற அனைவருமே ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்கள். 

கடந்த ஆண்டு டிசம்பரில் வுஹானில் இருந்து வைரஸ் பரவத் தொடங்கியது. இது தற்போது நாட்டில் மொத்தம் 78,500 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், கடந்த சில வாரங்களாக குறைந்து வருகின்றன. ஆனால் ஹூபேயில் இன்னும் அச்சம் தொடர்கிறது. ஆனால் சீனாவின் பிற நகரங்களில் வாழ்க்கை மீண்டும் இயல்பான பாதைக்கு திரும்புகிறது. அனைத்து பள்ளிகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், சீனா நோயின் தரவுகளை மறைத்து வருவதாக பல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

சீனாவுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தாக்கம் தென் கொரியாவில் அதிக அளவில் உள்ளது. தென் கொரியாவில் 1595 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளன. மேலும் 13 பேர் இதுவரை வைரஸால் உயிர் இழந்துள்ளனர். தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. தென் கொரியாவின் மொத்த கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் கிட்டத்தட்ட 50 சதவீதம் சின்செங்காங்கில் உள்ள தேவாலயத்தில் இருந்து அதிக கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேவாலயத்துக்கு செல்பவர்களில் 2 லட்சத்தில் 10 ஆயிரத்தில் 455 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. கொரோனாவின் பயம் நாடு முழுவதும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

ஜப்பான் கடற்கரையில் நிற்கும் டயமண்ட் இளவரசி என்ற கப்பலில் மொத்தம் 3,711 பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. 691 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 138 பேர் இந்தியர்கள். அதில் 119 இந்தியர்கள் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்கள். மீதமுள்ள இந்தியர்கள் ஜப்பானில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த இந்தியர்களையும் 5 வெளிநாட்டினரையும் டெல்லிக்கு அழைத்து வந்தது. இந்த 5 வெளிநாட்டினர் இலங்கை, நேபாளம், தென்னாப்பிரிக்கா மற்றும் பெருவைச் சேர்ந்தவர்கள். இந்த மக்களை விமானத்தில் செல்ல உதவிய ஜப்பானுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. 

அதேபோல ஜப்பானில் 164 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் இறந்துள்ளனர். 

இப்போது உலகின் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 50 நாடுகள் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் 93, தாய்லாந்தில் 40, தைவான் 32, பஹ்ரைன் 26, குவைத், ஆஸ்திரேலியா 23, மலேசியா 22, பிரான்ஸ் 18, ஜெர்மனி 18, இந்தியா மூன்று, பிரேசில் 1, எகிப்து 1, ஜார்ஜியா 1 உட்பட 48 நாடுகளைச் சேர்ந்த 82,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நாடுகளில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் பதற்றமும் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கிறது.

Trending News