ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

உக்ரைனில் ஆப்கானிஸ்தானைப் போன்று மீட்புப் பணியை நடத்தப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 12, 2022, 12:54 PM IST
  • உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தனது குடிமக்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
  • ஆப்கானைப் போல உக்ரைனில் மீட்புப் பணியை மேற்கொள்ளப் போவதில்லை என்று பிடன் கூறியுள்ளார்.
  • போலந்திற்கு கூடுதலாக 3000 அமெரிக்க துருப்புக்களை அனுப்ப பிடன் தயாராக உள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை! title=

உக்ரைன் எல்லையில் ரஷ்ய தனது ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  எல்லையில் எந்த ந்நேரமும் போர் மூளலாம் என்ற வகையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன என்றாலும், யாருடைய பேச்சையும் ரஷ்யா கேட்கும் நிலையில் இல்லை. 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளன. தனியார் அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில், உக்ரைனுக்கு அருகிலுள்ள பல பகுதிகளில் ரஷ்யா தனது இராணுவப் நடவடிக்கைகளை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Ukraine crisis: அமெரிக்காவிடம் THAAD எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பைக் கோரும் உக்ரைன்

மேலும் ரஷ்யா தாக்குதல் நடத்தினால், ஆப்கானிஸ்தானைப் போன்று எந்த ஒரு மீட்புப் பணியையும் தனது ராணுவம் நடத்தப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் கூறியுள்ளார்.  எனவே, ஏராளமான அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குடிமக்களும் உக்ரைனை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். 
எனினும், உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, போலந்தில் மேலும் 3000 அமெரிக்க வீரர்களை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. போலந்தில் ஏற்கனவே அமெரிக்க இராணுவத்தின் நிரந்தர தளம் கொண்டுள்ள நிலையில், ஆப்கானை போன்று மீட்பு நடவடிக்கை இருக்காது என கூறினாலும், உக்ரைனில் இருந்து அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது போன்ற பணிகளில் வீரர்களை ஈடுபடுத்தும் நோக்கில் அதிபர்  ஜோ பைடன் ராணுவ வீரர்களை அனுப்புகிறார் என கூறப்படுகிறது.

இந்த மாதம் குளிர்கால ஒலிம்பிக்ஸ் முடிவதற்குள் ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் உக்ரைனை ஆக்கிரமிக்கக்கூடும் என்று  அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா - உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News