தென் கொரியா செஜாங் மருத்துவமனையில் தீ விபத்து: 15 பேர் பலி; 50 பேர் காயம்

தென் கொரியாவில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் 

Last Updated : Jan 26, 2018, 08:52 AM IST
தென் கொரியா செஜாங் மருத்துவமனையில் தீ விபத்து: 15 பேர் பலி; 50 பேர் காயம் title=

தென் கொரியா நாட்டில் தென்கிழக்கு பகுதியில் அமைத்துள்ள மிர்யாங் நகரில் செஜாங் மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் வயோதிக மக்களுக்கு அதிகமாக் சிகிச்சை அளிக்கப்படுகிறது. செஜாங் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு அறைக்குள் தீப்பிடித்து வருகிறது என்று யோகப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அவசர சிகிச்சை பிரிவு அறையில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருந்தனர் என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்தனர், 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்தில் இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வந்துள்ளது.

தீ விபத்தினை அடுத்து அனைத்து நோயாளிகளும் மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சிலர் மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Trending News