7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 2023 ஜனவரியில் மீண்டும் சம்பள உயர்வு

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஊழியர்களின் ஊதியம் அதிகரிப்பதற்கான குறியீடுகள் கிடைத்துள்ளன.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 9, 2022, 10:25 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
  • ஊழியர்களின் அகவிலைப்படியில் அடுத்த ஆண்டு நல்ல ஏற்றம் இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகியுள்ளன.
  • குறியீட்டின் அதிகரிப்புடன், அடுத்த ஆண்டு, அதாவது ஜனவரி 2023 இல் அகவிலைப்படி, அதாவது டிஏ-வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கக்கூடும் என்பது தெளிவாகியுள்ளது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 2023 ஜனவரியில் மீண்டும் சம்பள உயர்வு title=

7வது ஊதியக் கமிஷன்: மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை அதாவது டிஏ-வை அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்துவது குறித்த அறிவிப்பையும் இந்த மாதம் வெளியிடக்கூடும். இந்நிலையில், மத்திய ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியில் அடுத்த ஆண்டு நல்ல ஏற்றம் இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகியுள்ளன. 

ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவு வெளியிடப்பட்டது

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு தொழில்துறை தொழிலாளர்களின் தரவை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது அடுத்த அரையாண்டுக்கு முந்தைய எண்ணிக்கையாக இருந்தாலும், இந்த எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால், அடுத்த ஆண்டுக்கான அகவிலைப்படியிலும் அதிகரிப்பு இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஏஐசிபிஐ குறியீடு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூலை 2022 இல் 0.7 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய அப்டேட், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 

இந்த மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம்

மத்திய அரசு, ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இம்மாதம் 28 ஆம் தேதி நவராத்திரியின் போது மத்திய அரசு டிஏ உயர்வை அறிவிக்கக்கூடும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். ஜனவரி முதல் ஜூன் வரையிலான தரவுகளின் அடிப்படையில், ஜூலை 2022-க்கான அகவிலைப்படி அறிவிக்கப்பட உள்ளது.

அடுத்த வருடமும் அகவிலைப்படி அதிகரிக்க வழி பிறந்தது

நுகர்வோர் விலைக் குறியீட்டின் தரவுகளில் உள்ள வேறுபாட்டைப் பார்த்தால், ஜூன் மாதத்தில் 129.2 ஆக இருந்த புள்ளி அளவு ஜூலை 2022 இல் அதிகரித்துள்ளது. குறியீட்டின் அதிகரிப்புடன், அடுத்த ஆண்டு, அதாவது ஜனவரி 2023 இல் அகவிலைப்படி, அதாவது டிஏ-வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கக்கூடும் என்பது தெளிவாகியுள்ளது. இருப்பினும், ஐந்து மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இப்போது எவ்வளவு அதிகரிக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின் அடிப்படையில் 2023 ஜனவரியில் அகவிலைப்படி முடிவு செய்யப்படும்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் DR உயர்வு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News