7th Pay Commission சூப்பர் செய்தி: ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய அப்டேட், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! ஃபிட்மென்ட் ஃபாக்டர் மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளிக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 6, 2022, 05:20 PM IST
  • ஃபிட்மென்ட் ஃபாக்டரில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும்.
  • ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து செப்டம்பர் மாதத்திலேயே அரசு முடிவெடுக்கக்கூடும்.
  • இதில் மாற்றம் வந்தவுடன் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் உயரும்.
7th Pay Commission சூப்பர் செய்தி: ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய அப்டேட், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு title=

7வது ஊதியக் கமிஷன் ஃபிட்மென்ட் ஃபேக்டர் அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! ஃபிட்மென்ட் ஃபாக்டர் மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளிக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டரில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும். வட்டாரங்கள் மூலம் ஜீ மீடியாவுக்கு கிடைத்த செய்தியின்படி, செப்டம்பர் இறுதியில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கலாம்.

மாற்றத்திற்கான நீண்டகால கோரிக்கை

இது தவிர, ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து செப்டம்பர் மாதத்திலேயே அரசு முடிவெடுக்கக்கூடும். இதில் மாற்றம் வந்தவுடன் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் உயரும். ஃபிட்மென்ட் ஃபேக்டரில் மாற்றம் ஏற்பட்டவுடன், அதன் விளைவு முழு சம்பளத்திலும் தெரியும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் தொடர்பாக செப்டம்பர் மாத இறுதிக்குள் ஒரு சந்திப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஃபிட்மென்ட் ஃபாக்டரில் மாற்றங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டால், 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம், ஃபிட்மென்ட் ஃபாக்டரின் கீழ் உயர்த்தப்படும். ஃபிட்மென்ட் ஃபேக்டரை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஓய்வூதியத்தில் அகவிலை நிவாரண தொகையை கணக்கிடுவது எப்படி? 

சம்பளத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு முக்கிய பங்கு உள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் ஃபிட்மென்ட் ஃபாக்டர் வழங்கப்படுகிறது. இது செப்டம்பரில் 3.68 மடங்கு அதிகரிக்கக்கூடும். மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டரில் மாற்றம் என்பது உங்கள் சம்பளத்தையும் பாதிக்கும். இதன் அடிப்படையில் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்த்தப்படுகிறது.

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2017ல் உயர்த்தப்பட்டது

ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்தினால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18 ஆயிரத்தில் இருந்து 26 ஆயிரமாக உயரும். முன்னதாக 2017-ம் ஆண்டு தொடக்க நிலை ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தை உயர்த்தி அரசு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் அதன் பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.66,900 ஆகவும் உள்ளது.

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: இந்த தேதியில் இருந்து அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News