Old Pension Scheme முக்கிய அப்டேட்: அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பிறகு மத்திய அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 10, 2023, 04:36 PM IST
  • பழைய ஓய்வூதியத் திட்டம் பாதுகாப்பான திட்டமாகும்.
  • இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படும்.
  • என்பிஎஸ் -இன் கீழ், வருமான வரித் துறையின் பிரிவு 80C மற்றும் 80CCD இன் கீழ் வரி விலக்கு கோரலாம்.
Old Pension Scheme முக்கிய அப்டேட்: அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை title=

பழைய ஓய்வூதியத் திட்டம்: கடந்த சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பல மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த கோரிக்கை உள்ளது. இந்த நிலையில், பல மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத்  திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியும் உள்ளன.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் போன்ற நாட்டின் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய மாநிலங்களில் அடங்கும். இதைத் தொடர்ந்து, இந்த மாநிலங்களின் ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறத் தொடங்கியுள்ளனர். ஆனால், மாநில அரசின் இந்த முடிவுக்குப் பிறகு, மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பிறகு மத்திய அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அரசின் இந்த பெரிய நடவடிக்கை அரசுக்கு ஆபத்தை விளைவிக்கும் என மாநில நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் நிதியில்லாத ஓய்வூதியப் பொறுப்புகள் (அன்ஃபண்டட் பென்ஷன் லயபலிடீஸ்) பிரச்சனை வரக்கூடும் என ஆர்பிஐ கூறியுள்ளது. சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரக்கூடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | Old Pension திட்டத்தில் முக்கிய மாற்றும்..புதிய அப்டேட்டை வெளியிட்ட அரசு

இந்த மாநிலங்கள் மறுசீரமைப்புக்கு முன் அறிவிப்பை வெளியிட்டன

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்பதற்கு முன், சத்தீஸ்கர், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அதைப் பற்றி தெரிவித்துள்ளன. இந்த மாநில அரசுகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்ற இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. இதையடுத்து பாஜக ஆட்சி உள்ள மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. மொத்தத்தில் பழைய ஓய்வூடியத் திட்டம் ஒரு தேர்தல் பிரச்சார உத்தியாகவே மாறிவிட்டது. 

ஏப்ரல் 1, 2004 இல், பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) என்ற ஓய்வூதிய திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியமாக கிடைக்கும். மறுபுறம், பழைய ஓய்வூதிய திட்டத்தில், 14 சதவீத ஓய்வூதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

என்பிஎஸ் திட்டத்தின் நன்மைகள்

என்பிஎஸ் -இன் கீழ், வருமான வரித் துறையின் பிரிவு 80C மற்றும் 80CCD இன் கீழ் வரி விலக்கு கோரலாம்.

என்பிஎஸ் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வூதிய நிதிகள் மற்றும் முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

இரண்டில் எது அதிக நன்மை பயக்கும்

ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், பழைய ஓய்வூதியத் திட்டம் பாதுகாப்பான திட்டமாகும். இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இதில் நீங்கள் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்யும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பெறப்பட்ட தொகை உங்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | Old Pension அமலால் ஊழியர்களுக்கு ஜாக்பாட், இவ்வளவு சம்பளம் உயர்வா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News