OPS-NPS முக்கிய அப்டேட்: தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்தது மாநில அரசு

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்ய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மாநில அரசு கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 26, 2023, 02:15 PM IST
  • ஓபிஎஸ் -இல் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு ரூ.20 லட்சம் வரை கிராஜுவிட்டி கிடைக்கும்.
  • என்.பி.எஸ்-ல் பணி ஓய்வு பெறும் போது நிரந்தரப் பணிக்கொடை வழங்கப்படுவதில்லை.
  • ஓ.பி.எஸ்-ல் பணிபுரியும் ஊழியர் ஓய்வு பெறும்போது அவர் ஜிபிஎஃப் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
OPS-NPS முக்கிய அப்டேட்: தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்தது மாநில அரசு title=

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான சர்ச்சை நீண்ட நாட்களாக நாடு முழுவதும் உள்ளது. சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் இதை அமல்படுத்த வேண்டும் என போராட்டங்கள் மூலமாகவும், பேச்சுவர்த்தைகள் மூலமாகவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இடற்கிடையில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்ய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மாநில அரசு கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் கீழ், சத்தீஸ்கர் அரசு மே 8 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) அல்லது புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) தேர்வு செய்வதற்கான விருப்பத்தை வழங்குவதற்கான காலக்கெடுவை 2023 மே 8 ஆம் தேதி வரை மாநில அரசு நிர்ணயித்துள்ளது. முன்னதாக அதன் கால அவகாசம் மார்ச் 5-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டது. அரசின் அறிவுறுத்தலின்படி கீழ்நிலை ஊழியர்களிடம் இருந்து விருப்பத்தேர்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அலுவலகத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே 8க்குள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வெண்டும்

மாநில அரசின் உத்தரவின்படி, அரசு ஊழியர்கள் சிலரால் மாற்று எதுவும் முன்வைக்கப்படவில்லை. பரிசீலனைக்குப் பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டம் அல்லது என்பிஎஸ் தேர்வுக்கான காலக்கெடுவை மே 8, 2023க்குள் மாநில அரசு நிர்ணயித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் அல்லது என்பிஎஸ் தேர்வுக்கான விருப்பம் அரசு ஊழியர்களால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேறு வாய்ப்பு வழங்கப்படாது. இந்த வழியில், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் விருப்பத்தை சமர்ப்பிக்காத அரசு ஊழியர்களுக்கு, தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கான (என்பிஎஸ்) ஒப்புதலை அவர்கள் அளித்ததாக ஏற்றுக்கொள்ளப்படும். 

மேலும் படிக்க | Old Pension Scheme: இரட்டை லாபம் பெறும் ஊழியர்கள்... அரசு விதித்த அதிரடி தடை!

ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் -க்கு இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

- ஓபிஎஸ் -இல், அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு, கடைசி அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பாதி அரசு கருவூலத்தில் இருந்து ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஓபிஎஸ் இல், அகவிலைப்படியும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை உயர்த்தப்படுகிறது. ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 

- ஓபிஎஸ் -இல், ஓய்வூதியம் பெறுபவருக்கு 80 வயதாகும்போது அடிப்படை ஓய்வூதியம் 20 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இந்த வகையில், ஓய்வூதியம் பெறுபவருக்கு 85 வயதில் 30 சதவீதமும், 90 வயதில் 40 சதவீதமும், 95 மற்றும் 100 வயதில் 50 சதவீதமும் ஓய்வூதியம் அதிகரிக்கிறது. ஓய்வூதியம் பெறுபவர் 100 வயதை எட்டும்போது ஓய்வூதியத் தொகை இரட்டிப்பாகிறது.

- புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர் தனது ஓய்வூதியத்தில் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதத்தை செலுத்த வேண்டும், மாநில அரசு 14 சதவீதத்தை மட்டுமே செலுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும்போது ஓய்வூதியம் பெற என்பிஎஸ் நிதியில் 40 சதவீதத்தை முதலீடு செய்வது அவசியம். மேலும் ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்துக்கான உத்தரவாதம் இல்லை.

- புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இதில் அகவிலைப்படி வழங்குவது இல்லை. என்.பி.எஸ். -இல், பணியின் போது ஊழியர் இறந்தால், ஊழியர் குடும்ப உறுப்பினர்களுக்கு, மொத்த சம்பளத்தில், 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க விதிமுறை உள்ளது.

- ஓபிஎஸ் -இல் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு ரூ.20 லட்சம் வரை கிராஜுவிட்டி கிடைக்கும். என்.பி.எஸ்-ல் பணி ஓய்வு பெறும் போது நிரந்தரப் பணிக்கொடை வழங்கப்படுவதில்லை. ஓ.பி.எஸ்-ல் பணிபுரியும் ஊழியர் ஓய்வு பெறும்போது அவர் ஜிபிஎஃப் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ஓய்வு பெற்ற ஊழியர்களும் ஊதியக் கமிஷன் அமலாக்கப்படும்போது ஓய்வூதிய திருத்தத்தின் பலனைப் பெறுகிறார்கள்.

- ஓபிஎஸ் போல் அல்லாமல், புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பங்குச் சந்தையின்படி ஓய்வு பெறும்போது, ​​அதற்கு வரி செலுத்த வேண்டும். ஓபிஎஸ்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் அகவிலைப்படி பொருந்தும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது பொருந்தாது.

மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய செய்தி: வெளியானது படிவம்: இதுதான் கடைசி தேதி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News