அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி!! இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது, விதிகளில் மாற்றம்

Pension and Gratuity: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 15, 2023, 04:54 PM IST
  • பணியின் போது ஒரு ஊழியர் பணியில் அலட்சியமாக இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இந்த உத்தரவு மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்.
  • வரும் காலங்களில், பல்வேறு மாநில அரசுகளும் இந்த விதியை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி!! இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது, விதிகளில் மாற்றம் title=

கிராஜுவிட்டி மற்றும் ஓய்வூதிய விதி: சமீப காலங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல நல்ல செய்திகள் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன. ஜனவரி 2023 முதல் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. அடுத்தபடியாக, ஜூலை முதலும் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. மறுபுறம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் பெருமளவு ஏற்றம் இருக்கும்.

இவற்றுக்கு மத்தியில் ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியும் வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டது. இந்த எச்சரிக்கையை ஊழியர்கள் புறக்கணித்தால், பின்னர் அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடலாம். இது மட்டுமின்றி, ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை அதாவது கிராஜுவிட்டி கிடைக்காத நிலையும் ஏற்படக்கூடும். 

இந்த உத்தரவு மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்

பணியின் போது ஒரு ஊழியர் பணியில் அலட்சியமாக இருந்தால், ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும். வரும் காலங்களில், பல்வேறு மாநில அரசுகளும் இந்த விதியை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு உத்தரவு பிறப்பித்தது

மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள் 2021ன் கீழ் அரசாங்கம் கடந்த காலத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் விதி 8 அரசாங்கத்தால் மாற்றப்பட்டது. அதில் புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டன. மத்திய பணியாளர்கள் பணியின் போது ஏதேனும் கடுமையான குற்றம் அல்லது அலட்சியம் காட்டினால், பணி ஓய்வுக்குப் பிறகு அவர்களின் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆட்சியில் கடுமை காட்டி வரும் மத்திய அரசு, மாற்றப்பட்ட விதி குறித்த தகவல்களை, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இதுமட்டுமின்றி, குற்றவாளிகளின் தகவல் கிடைத்ததும், அவர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விதியை அரசு மிகக் கடுமையாகப் பார்க்கிறது.

இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்

- ஓய்வுபெற்ற ஊழியர்களின் நியமன அதிகாரத்தில் ஈடுபட்டுள்ள பிரெசிடெண்டுகளுக்கு பணிக்கொடை அல்லது ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க உரிமை உண்டு.
- ஓய்வுபெறும் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையுடன் தொடர்புடைய செயலாளர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைக்க உரிமை உண்டு.
– ஒரு ஊழியர் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால், குற்றம் புரிந்த ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைக்க சிஏஜிக்கு உரிமை உண்டு.

மேலும் படிக்க | எலக்ட்ரானிக்ஸ் முதல் உணவு வரை... SBI Card அள்ளி வழங்கும் சலுகைகள்... மிஸ் பண்ணாதீங்க!

இந்த நடவடிக்கை எப்படி எடுக்கப்படும்

- விதியின்படி, பணியின் போது ஊழியர்கள் மீது ஏதேனும் துறை அல்லது நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
- ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு ஒப்பந்தத்தில் மீண்டும் நியமிக்கப்பட்டால், அதே விதிகள் அவருக்கும் பொருந்தும்.
- ஒருவேளை, ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையைப் பெற்று, அதன் பிறகு அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திரும்பப் பெறலாம். அதற்கான வசதியும் உள்ளது.

அத்தகைய சூழ்நிலையில், இறுதி உத்தரவை வழங்குவதற்கு முன், எந்தவொரு அதிகாரியும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் பரிந்துரைகளைப் பெற வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வூதியம் நிறுத்தப்பட்டாலோ அல்லது திரும்பப் பெறப்பட்டாலோ, குறைந்தபட்சத் தொகை மாதத்திற்கு ரூ.9000 -க்குக் குறைவாக இருக்கக் கூடாது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் 50% டிஏ, ஊழியர்களின் ஊதியம் அதிரடி ஏற்றம் காணும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News