Old Pension Scheme முக்கிய அப்டேட்: உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு

Old Pension Scheme: மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 13, 2023, 09:46 AM IST
  • பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது.
  • அரசின் இந்த முடிவுக்கு பிறகு மத்திய அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
  • அரசின் இந்த பெரிய நடவடிக்கை அரசுக்கு ஆபத்தை விளைவிக்கும் என மாநில நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Old Pension Scheme முக்கிய அப்டேட்: உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு title=

பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பல மாதங்களாக நாடு முழுவதும் பல வித சர்ச்சைகளும் போராட்டங்களும் நடந்து வருகின்றன. மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல மாநில அரசு ஊழியர்களும் இதற்காக போராடி வருகின்றனர். இதற்கிடையில், ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஓய்வூதியக் கொள்கை பாரபட்சமானது எனக் கூறப்படுகிறது

ஜல் சன்ஸ்தானின் முழு ஓய்வூதியக் கொள்கையும் பாரபட்சமானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனுடன், ஓய்வு பெற்ற ஊழியருக்கு, தினக்கூலியாக பணிபுரியும் பணிக்கு பொருந்தும் பழைய ஓய்வூதியத்தை இணைத்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் பலன்களை வழங்குவதற்கான வழிமுறைகள்

தினக்கூலி ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கு முந்தைய பணிக்காலம், அவர்களது ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதியப் பலன்களில் சேர்க்கப்படும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜல் சன்ஸ்தானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓய்வூதியக் கொள்கை உணர்ச்சிகரமானது என்று விவரித்த நீதிமன்றம், ஊழியர்களுக்கு விரைவில் சலுகைகளை வழங்க அறிவுறுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் தினக்கூலிகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஓய்வூதியப் பலன்களுடன் அவர்களது சேவையையும் சேர்த்து அவர்களுக்குத் தொகை வழங்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | Old Pension Scheme முக்கிய அப்டேட்: அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை

இந்த அறிவிப்பு உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் சவுத்ரி மூலம் வெளியிடப்பட்டது. இதனுடன், ஜல் சன்ஸ்தானைச் சேர்ந்த நான்காம் வகுப்பு ஊழியர் தயாசங்கரின் மனு மீதும் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் வழக்கறிஞர் அக்னிஹோத்ரி குமார் திரிபாதி வாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கில், வழக்கறிஞர் திரிபாதி கூறுகையில், 1987-ம் ஆண்டு தினக்கூலியாக ஜல் சன்ஸ்தானால் நியமிக்கப்பட்டதாகவும், அவர் 2006 ஆம் ஆண்டில் பர்மனண்டாகி, ஆகஸ்ட் 2021 இல் ஓய்வு பெற்றார். இருந்தும் அவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் வழங்கப்படவில்லை. இதையடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை ஊழியர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் போன்ற நாட்டின் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய மாநிலங்களில் அடங்கும். இதைத் தொடர்ந்து, இந்த மாநிலங்களின் ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறத் தொடங்கியுள்ளனர். ஆனால், மாநில அரசின் இந்த முடிவுக்குப் பிறகு, மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பிறகு மத்திய அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அரசின் இந்த பெரிய நடவடிக்கை அரசுக்கு ஆபத்தை விளைவிக்கும் என மாநில நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் நிதியில்லாத ஓய்வூதியப் பொறுப்புகள் (அன்ஃபண்டட் பென்ஷன் லயபலிடீஸ்) பிரச்சனை வரக்கூடும் என ஆர்பிஐ கூறியுள்ளது. சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரக்கூடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் போன்ற நாட்டின் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய மாநிலங்களில் அடங்கும். இதைத் தொடர்ந்து, இந்த மாநிலங்களின் ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறத் தொடங்கியுள்ளனர். ஆனால், மாநில அரசின் இந்த முடிவுக்குப் பிறகு, மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பிறகு மத்திய அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அரசின் இந்த பெரிய நடவடிக்கை அரசுக்கு ஆபத்தை விளைவிக்கும் என மாநில நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் நிதியில்லாத ஓய்வூதியப் பொறுப்புகள் (அன்ஃபண்டட் பென்ஷன் லயபலிடீஸ்) பிரச்சனை வரக்கூடும் என ஆர்பிஐ கூறியுள்ளது. சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரக்கூடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

என்பிஎஸ் திட்டத்தின் நன்மைகள்

என்பிஎஸ் -இன் கீழ், வருமான வரித் துறையின் பிரிவு 80C மற்றும் 80CCD இன் கீழ் வரி விலக்கு கோரலாம்.

என்பிஎஸ் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வூதிய நிதிகள் மற்றும் முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

இரண்டில் எது அதிக நன்மை பயக்கும்

ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், பழைய ஓய்வூதியத் திட்டம் பாதுகாப்பான திட்டமாகும். இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இதில் நீங்கள் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்யும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பெறப்பட்ட தொகை உங்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | Old Pension திட்டத்தில் முக்கிய மாற்றும்..புதிய அப்டேட்டை வெளியிட்ட அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News