Budget 2024: விலை குறையும் ஸ்மார்போன்கள்... பேட்டரிகள் மீதான வரி குறைப்பு..!!

Budget 2024: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக  ஸ்மார்ட்போன் விலைகள் குறையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 23, 2024, 01:08 PM IST
  • ஸ்மார்ட்போனின் உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி குறைப்பு.
  • நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • ஸ்மார்போன் உற்பத்தி துறையில் செய்யப்படும் முதலீடு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
Budget 2024: விலை குறையும் ஸ்மார்போன்கள்... பேட்டரிகள் மீதான வரி குறைப்பு..!! title=

Budget 2024: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக  ஸ்மார்ட்போன் விலைகள் குறைக்கப்படுமா என்பது குறித்த எதிர்ப்பார்புகள் நிலவியது. இந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

2024 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்மார்ட்போனின் உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்க வரியை 15 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்தார். தொலைபேசிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கு அத்தியாவசியமான லித்தியம் அயன் பேட்டரிகள் மீதான வரி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.  இந்தியாவில் போன்களை உற்பத்தி செய்வதற்கான செலவை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறையினரிடையே நல்ல வரவேற்பைப் பெறும் அறிப்பான இதன் மூலம், ஸ்மார்போன் உற்பத்தி துறையில் செய்யப்படும் முதலீடு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.  

மேலும் படிக்க | Budget 2024 Live Updates: பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்... அறிவிப்புகள் உடனுக்குடன் இதோ!

வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பது உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கும் மேலும் பல நிறுவனங்களுக்கு பயனளிப்பதற்கும் ஏற்கனவே உள்ள சில PLI திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை பெரிய அளவிலான உற்பத்தியை மேலும் ஊக்குவிக்கும் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PLI திட்டத்தின் கீழ், தொழில்கள் பெருகி உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களின் அளவும் அதிகரிக்க்கும். எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் போன்ற 14 அத்தியாவசிய துறைகளுக்கான PLI திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே அமல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | வந்தாச்சு வாட்ஸ்அப்பின் லேட்டஸ் அப்டேட்! இனிமேல் இன்னும் ஸ்மார்ட்டாய் புகைப்படத்தை பார்க்கலாமே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News