விரைவில் விற்கப்படும் Air India, அனைத்து ஏற்பாடுகளும் தயார்?

கடனில் மூழ்கியுள்ள அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க அரசாங்கம் கிட்டத்தட்ட தயாரிப்புகளை முடித்துவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Last Updated : Sep 12, 2019, 06:16 AM IST
விரைவில் விற்கப்படும் Air India, அனைத்து ஏற்பாடுகளும் தயார்? title=

கடனில் மூழ்கியுள்ள அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க அரசாங்கம் கிட்டத்தட்ட தயாரிப்புகளை முடித்துவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த சில நாட்களாக, ஏர் இந்தியாவை தனியார் கைகளில் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், அமைச்சர்கள் குழு இருப்பு விலையை ஏர் இந்தியாவின் கடனை திருப்பிச் செலுத்த முடிவு செய்யும் வகையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம், இந்த அமைச்சர்கள் குழு நிறுவனத்தின் விற்பனை தொடர்பான பல சிக்கல்களை மூளைச்சலவை செய்யும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இவை நிறுவனத்தின் ஊழியர்களின் சேவை தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களையும் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரங்களின்படி, ஏர் இந்தியா விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகளை உறுதி செய்த பின்னர், அரசாங்கம் அதிலிருந்து முற்றிலும் பிரிந்து செல்லும் என கூறப்படுகிறது. மத்திய அரசின் இக்குழுவில் அமித் ஷா தவிர, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். 

முன்னதாக, அமைச்சர்கள் குழுவின் கூட்டத்திற்கு முன்பு உள் கூட்டம் நடத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்தார். அப்போதுதான் அரசாங்கம் ஏர் இந்தியாவை விற்கும் பணியைத் தொடங்கும் என்றும், ஏர் இந்தியாவின் நிதி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நிதி நெருக்கடி காரணமாக ஆறு விமான நிலையங்களில் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் வழங்குவதை நிறுத்திவிட்டன. இதனால் ராஞ்சி, மொஹாலி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் நிறுவனத்தின் விமானங்களுக்கு எரிபொருள் கிடைக்கா சூழள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக விமானம் திருப்பிச் செலுத்தாத மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா ரூ .4500 கோடிக்கு மேல் கடன்பட்டுள்ளது. மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கடனை அடைக்க ஏர் இந்தியாவுக்கு 90 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே கடலில் ஒரு துளி போன்று ரூ .60 கோடியை அளிக்க ஏர் இந்தியா முன்வந்துள்ளது. இதுதொடர்பாக மூன்று எண்ணெய் நிறுவனங்களும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஏர் இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தன, ஆனால் அந்த கடிதத்திற்கு எந்த பதிலும் இல்லை. எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை என்று வாதிடுகின்றன, அதே நேரத்தில் ஏர் இந்தியா அரசாங்கத்திடமிருந்து முழு ஆதரவையும் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

Trending News