EPFO சூப்பர் செய்தி: பிஎஃப் வட்டித்தொகை பற்றிய ஜாக்பாட் அப்டேட் இதோ

EPFO Update: 2022-23 ஆம் ஆண்டிற்கு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் இபிஎஃப் -க்கு 8.15 சதவிகிதம் என்ற விகிதத்தில் உறுப்பினர்களின் கணக்குகளில் வட்டியை வரவு வைக்க வேண்டும் என இபிஎஃப்ஓ, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 31, 2023, 04:52 PM IST
  • வட்டி செலுத்தும் தேதியை அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.
  • எனினும் அரசு இந்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • இபிஎஃப் வட்டியை அரசாங்கம் ஊழியர்களின் கணக்கில் வரவு வைத்தவுடன், ஊழியர்களின் கணக்கில் மொத்தமாக ஒரு தொகை வரும்.
EPFO சூப்பர் செய்தி: பிஎஃப் வட்டித்தொகை பற்றிய ஜாக்பாட் அப்டேட் இதோ

EPFO Update: மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. 2022-23 நிதியாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் (EPFO) கீழ் வைப்புத்தொகைக்கு 8.15 சதவீத வட்டி வழங்க மோடி அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் பெரிதும் பயனடைவதுடன் அவர்களின் எதிர்காலமும் பாதுகாப்பு பெறும். 2022-23 ஆம் ஆண்டிற்கு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் இபிஎஃப் -க்கு 8.15 சதவிகிதம் என்ற விகிதத்தில் உறுப்பினர்களின் கணக்குகளில் வட்டியை வரவு வைக்க வேண்டும் என இபிஎஃப்ஓ, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

மார்ச் 2022 இல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2021-22 க்கான இபிஎஃப் ​​வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 2020-2021 இல் இருந்த 8.5 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைத்தது. இபிஎஃப் (EPF) மீதான வட்டி விகிதம் 1977-78ல் 8 சதவீதமாக இருந்தது, அப்போது அந்த விகிதம் அது வரையிலான மிகக் குறைவான வீதமாக இருந்தது.

ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) ​​2022-2023 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஊழியர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக வந்தது. 

மார்ச் மாதம் EPFO ​​அறங்காவலர்களால் அங்கீகரிக்கப்பட்ட EPF வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது. இப்போது EPFO ​​இன் பிராந்திய அலுவலகங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வட்டியை டெபாசிட் செய்யும்.

மேலும் படிக்க | நானோ ஆலை விவகாரம் .... டாடா குழுமத்துக்கு ரூ.766 கோடி இழப்பீடு வழங்க மேற்குவங்க அரசுக்கு நடுவர் மன்றம் உத்தரவு

வட்டி செலுத்தும் தேதியை அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் அரசு இந்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இபிஎஃப் வட்டியை அரசாங்கம் ஊழியர்களின் கணக்கில் வரவு வைத்தவுடன், ஊழியர்களின் கணக்கில் மொத்தமாக ஒரு தொகை வரும். 

எப்படி செக் செய்வது

பிஎஃப் வட்டி தொகையை அரசு ஊழியர்களின் கணக்கில் வரவு வைத்தவுடன் அது தங்கள் கணக்கில் வந்துவிட்டதா என்பதை ஊழியர்கள் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இதை எப்படி செய்வது? இதற்காக எங்கும் சென்று அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இதை தெரிந்துகொள்ளலாம்.

தொகையை இந்த வகையில் செக் செய்யலாம்

பிஎஃப் சந்தாதாரர்கள் வட்டியாகப் பெற்ற தொகையை செக் செய்ய எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த தொகையை பின் வரும் வழிகளில் செக் செய்யலாம்.

1. உமங் செயலி மூலம்
2. இபிஎஃப்ஓ இணையதளம் மூலம்
3. மிஸ்ட் கால் கொடுத்து
4. எஸ்எம்எஸ் அனுப்பி

1. உமங் செயலி:
EPF கணக்கில் அரசாங்கம் எவ்வளவு தொகையை செபாசிட் செய்துள்ளது என்பதை அறிய நீங்கள் எங்கும் அலைய வேண்டியது இல்லை. பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம். 

2. இபிஎஃப்ஓ இணையதளம்
EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

3.மிஸ்ட் கால்
மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணை இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்ய வேண்டும். பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்குத் தகவல் வரும்.

4. எஸ்எம்எஸ் 
எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்றால் மொழி என்று பொருள். 

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு அளித்த பம்பர் பரிசு: ஊதியத்தில் அதிரடி உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News