சுமார் 1.5 கோடி தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ், DA உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரு மடங்காக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 23, 2021, 04:54 PM IST
சுமார் 1.5 கோடி தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ், DA உயர்வு title=

கடந்த மே 21 ஆம் தேதி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தற்காலிக மத்திய அரசு ஊழியர்களின் மாறக்கூடிய அகவிலைப்படி (Variable Dearness Allowance) மாதத்திற்கு 105 ரூபாயிலிருந்து 210 ரூபாயாக உயர்த்தியது. இந்த அறிவிப்பானது சுமார் 1.5 கோடி தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும். 

இந்தப் புதிய அகவிலைப்படி (DA) உயர்வானது 2021 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசில் (Central Government Employees) பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதத்தையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் என்ன மாற்றம்?

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் பணியாற்றும் சுமார் 1.50 கோடி தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும். அதுவும் தற்போதைய கொரோனா காலத்தில் இது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்து உள்ளார். 

மத்திய துறையில் திட்டமிடப்பட்ட வேலைவாய்ப்புக்காக நிர்ணயிக்கப்பட்ட விகிதங்கள் மத்திய அரசு, ரயில்வே நிர்வாகம், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், முக்கிய துறைமுகங்கள் மற்றும் மத்திய அரசால் நிறுவப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் அரசாங்கம் கூறியது. இந்த விகிதங்கள் ஒப்பந்த மற்றும் சாதாரண ஊழியர்கள் / தொழிலாளர்களுக்கும் பொருந்தும். தொழில்துறை பணியாளர்களுக்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் மாறுபடும் அகவிலைப்படி திருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News