வீட்டுக்கடன் வாங்க போறீங்களா? இந்த ஆவணங்கள் முக்கியம்!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான வீட்டு கடன்களை வழங்கி வரும் நிலையில் வழக்கமான வீட்டுக்கடன்களுக்கு விண்ணப்பிப்பதற்கான சரியான தகுதி இருக்க வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Apr 6, 2023, 12:56 PM IST
  • கடனை வாங்க முதல் தகுதி விண்ணப்பதாரர் 18 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • கடன் வாங்கும் பெண்களுக்கு வட்டிச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.
வீட்டுக்கடன் வாங்க போறீங்களா? இந்த ஆவணங்கள் முக்கியம்! title=

பாரத ஸ்டேட் வங்கி அதன் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கடன்களை வழங்கி வருகிறது.  அதில் வீட்டுக்கடன்களை பொறுத்த வரையில் வழக்கமான வீட்டுக் கடன்கள், என்ஆர்ஐ வீட்டுக் கடன்கள், ஃப்ளெக்ஸிபே வீட்டுக் கடன்கள், ஷௌர்யா வீட்டுக் கடன்கள் மற்றும் ரியல்டி வீட்டுக் கடன்கள் போன்ற பல விருப்பங்களை வங்கி வழங்குகிறது.  தயாராக கட்டப்பட்ட சொத்தை வாங்குதல், கட்டுமானத்தின் கீழ் உள்ள சொத்து, முன் சொந்தமான வீடுகள், ஒரு வீட்டைக் கட்டுதல், ஒரு வீட்டை நீட்டித்தல் மற்றும் பழுதுபார்த்தல்/புதுப்பித்தல் போன்ற பல்வேறு தேவைகளை வீட்டுக்கடன்கள் உள்ளடக்கியுள்ளது.

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட், நிதி அமைச்சகம் புதிய அப்டேட் வெளியீடு

எஸ்பிஐ வங்கி வழங்கக்கூடிய வீட்டுக்கடன்களானது குறைந்த வட்டி விகிதங்கள், குறைந்த செயலாக்கக் கட்டணம், அபராதம் இல்லை, தினசரி குறைக்கும் இருப்புக்கான வட்டிக் கட்டணம், 30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் ஓவர் டிராஃப்ட் விருப்பம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் வருகிறது.  மேலும் கடன் வாங்கும் பெண்களுக்கு வட்டிச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.  எஸ்பிஐ வழக்கமான வீட்டுக் கடனை வாங்க முதல் தகுதி விண்ணப்பதாரர் 18 முதல் 70 வயதுக்குட்பட்ட இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.  கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் அடையாள அட்டை, பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம், அடையாளம் மற்றும் குடியிருப்புக்கான சான்று, சொத்து ஆவணங்கள் மற்றும் வருமானச் சான்று போன்ற முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  சில சமயம் வங்கி ஏதேனும் கூடுதல் ஆவணத்தை கேட்கும் பட்சத்தில் நீங்கள் அதனை சமர்ப்பிக்கலாம்.

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ வங்கியின் ஏதேனும் ஒரு கிளைக்கோ அல்லது வங்கியின் அதிகாரபூர்வ இணையத்தளத்திலோ விண்ணப்பித்து கொள்ளலாம்.  கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவை கடன் மதிப்பெண், வருமானம், சொத்து மதிப்பு மற்றும் கடன் தொகை போன்ற காரணிகளைப் பொறுத்தது.  பொதுவாக நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து வாங்குவது சரியான தேர்வாக இருக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... அடிப்படை ஊதியத்தில் அதிரடி ஏற்றம் விரைவில், கணக்கீடு இதோ!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News