LIC Dhan Sanchay: இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ. 22 லட்சம் வரை வருமானம்!

Lic dhan sandhay: பாலிசி காலத்தின் போது குறிப்பிட்ட பாலிசிதாரர் இறந்துவிட்டால் பாலிசிதாரரின் குடும்பத்திற்கு இறப்புக்கான பலன்கள் கிடைக்கும்.

Written by - RK Spark | Last Updated : Feb 5, 2023, 07:59 PM IST
  • 5 முதல் 15 ஆண்டுகள் வரை பாலிசிதாரருக்கு கடன் வசதிகளை வழங்குகிறது.
  • பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்துவிட்டால் குடும்பத்திற்கு இறப்புக்கான பலன்கள் கிடைக்கும்.
LIC Dhan Sanchay: இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ. 22 லட்சம் வரை வருமானம்! title=

LIC Dhan Sanchay: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால்(எல்ஐசி) செயல்படுத்தப்படும் தன் சஞ்சய் பாலிசி திட்டமானது பாலிசிதாரர்களுக்கு சிறந்த வருமானத்தை தருவதோடு மட்டுமல்லாது, இறப்புக்கான பலன்களையும் தருகிறது. இந்த இணைக்கப்படாத, பங்கேற்பு, தனிநபர், சேமிப்புத் திட்டம் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையானது, முதிர்வுக்கு முன் பாலிசி காலத்தின் போது முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. 5 முதல் 15 ஆண்டுகள் வரையிலான காலத்துடன் கிடைக்கும் இந்த பாலிசியானது பாலிசிதாரருக்கு கடன் வசதிகளை வழங்குகிறது. பாலிசி காலத்தின் போது குறிப்பிட்ட பாலிசிதாரர் இறந்துவிட்டால் பாலிசிதாரரின் குடும்பத்திற்கு இறப்புக்கான பலன்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: HRA விதிகளில் மாற்றம்! இனி இவர்களுக்கு அலவன்ஸ்கள் கிடையாது! 

எல்ஐசி தன் சஞ்சய் பாலிசியானது பாலிசிதாரரின் இறப்புக்கான விருப்பங்களில் மொத்தத் தொகை அல்லது 5 ஆண்டு தவணைகள், உத்தரவாதமான வருமானம் மற்றும் டெர்மினல் பெனிபிட் ஆகியவை வழங்கப்படும். பாலிசிதாரர் பணம் செலுத்தும் காலத்தில் இறந்துவிட்டால் அவரது நாமினி தொடர்ந்து வருமானத்தைப் பெறுவார். இந்த திட்டமானது உங்களுக்கு A, B, C மற்றும் D ஆகிய நான்கு முதலீட்டு விருப்பங்களை வழங்குகிறது. A மற்றும் B விருப்பங்களில், காப்பீட்டுத் தொகை குறைந்தபட்சம் ரூ. 3,30,000 ஆகவும், C விருப்பத்தில் காப்பீட்டு தொகை குறைந்தபட்சம் ரூ. 2,50,000 ஆகவும், D விருப்பத்தில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.22,00,000 ஆகவும் இருக்கும். இந்த பாலிசியில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச வயது 3 ஆண்டுகள், மேலும் அதிகபட்ச வயது அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடும்.

A மற்றும் B விருப்பத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 50 ஆண்டுகள், C விருப்பத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 65 ஆண்டுகள் மற்றும் D விருப்பத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் 5, 10 அல்லது 15 ஆண்டுகள் என அவர்களின் வசதிக்கேற்ப பாலிசி காலத்தை தேர்வு செய்யலாம். இந்த பாலிசிக்கான குறைந்தபட்ச பிரீமியம் ஆண்டுக்கு ரூ.30,000 ஆகும் மற்றும் பாலிசிதாரர் இறந்தால், குறைந்தபட்ச இறப்புப் பலன் ரூ.2.50 லட்சமாகவும், அதிகபட்சமாக ரூ.22 லட்சமாகவும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்கு பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், மாஸ் செய்தி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News