பயணிகளின் கவனத்திற்கு; ரயிலில் இனி இலவசமாக இதை பெறுங்கள்

ரயிலில் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகள் ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து இலவச உணவைப் பெறலாம். ரயில்வேயின் இந்த விதியை நீங்கள் இன்னும் அறியவில்லை என்றால், அதைப் பற்றிய முழுமையான தகவலை இங்கே பெறுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 28, 2022, 08:34 AM IST
  • இந்திய ரயில்வேயின் இலவச உணவுக் கொள்கை
  • இந்திய ரயில்வே செய்திகள்
  • ஐஆர்சிடிசியின் புதிய திட்டம்
பயணிகளின் கவனத்திற்கு;  ரயிலில் இனி இலவசமாக இதை பெறுங்கள் title=

இந்திய ரயில்வே செய்திகள்: நீங்களும் அடிக்கடி இந்திய ரயில்வேயின் ரயில்களில் பயணம் செய்தால், இந்தச் செய்தியைக் கேட்டு நீங்களும் மகிழ்ச்சியடைவீர்கள். அதன்படி ரயிலில் பயணம் செய்யும் கோடிக்கணக்கான பயணிகள் ஐஆர்சிடிசியில் இருந்து இலவச உணவைப் பெறலாம். ஆம், ரயில்வேயின் இந்த விதியை நீங்கள் இன்னும் அறியவில்லை என்றால், அதைப் பற்றிய முழுமையான தகவலை இங்கே பெறுங்கள்.

இந்திய ரயில்வேவின் இந்த புதிய வசதியை தெரிந்துக்கொள்ளுங்கள்
சமீப காலமாக பயணிகளுக்கு பல வகையான வசதிகளை ரயில்வே செய்து தருகிறது. இதில் ஒன்று, உணவுக்காக பணம் செலுத்த வேண்டியதில்லை என்பது தான். ரயில்வேயின் இந்த வசதியை பயணிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே ரயில்வே தரப்பிலிருந்து இலவச உணவை எப்படிப் பெறலாம் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ஆதார் தொடர்பான புகார்களை எவ்வாறு தாக்கல் செய்வது? 

உங்கள் உரிமையை அனுபவிக்கவும்
நீங்கள் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து இலவச உணவுடன் குளிர் பானங்கள் மற்றும் தண்ணீரின் இலவச வசதியைப் பெறுவீர்கள். ஆனால் உங்கள் ரயில் தாமதமாக சென்றடைந்தால் மட்டுமே இந்த வசதியை நீங்கள் பெற முடியும். ரயில்வே விதிகளின்படி, ரயில் தாமதமாக சென்றடைந்தால் ஐஆர்சிடிசியின் கேட்டரிங் பாலிசியின் கீழ் பயணிகளுக்கு காலை உணவு மற்றும் லேசான உணவு வழங்கப்படும்.

இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகள் பயன்பெறலாம்
ஐஆர்சிடிசி விதிகளின்படி, ரயில் இரண்டு மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு இலவச மைல்கள் வசதி அளிக்கப்படுகிறது. இந்த வசதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதாவது சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரயிலில் கிடைக்கும் காலை உணவில் டீ/காபி மற்றும் பிஸ்கட் கிடைக்கும். மாலை நேர சிற்றுண்டியில் டீ அல்லது காபி மற்றும் நான்கு பிரட் துண்டுகள் (பிரவுன்/வெள்ளை), ஒரு பட்டர் இருக்கும். இதுதவிர, மதியம் ரயில் தாமதமானால், பணமின்றி ரொட்டி, தால் பருப்பு, காய்கறிகள் போன்றவற்றை வழங்கவும் விதிமுறை உள்ளது. சில சமயம் மதிய உணவு நேரத்திலும் பூரிகள் கொடுக்கப்படும்.

மேலும் படிக்க | ஆதார் கார்டுக்கான கட்டணங்கள் உயர்வு! புதிய கட்டண விவரம் இதோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News