ரூ.10 லட்சம் வரையில் கடன் வழங்கும் எஸ்பிஐ! மார்ச் 31,2023 கடைசி தேதி!

SBI Bank Loan: ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வட்டி விகிதம் 1 ஆண்டு எம்சிஎல்ஆர் மற்றும் ரூ.5 லட்சத்துக்கும் மேலான கடனுக்கு வட்டி விகிதம் 9 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Jan 3, 2023, 07:40 AM IST
  • கடன் வழங்கும் எஸ்பிஐ வங்கி.
  • ரூ.3 லட்சம் கடனுக்கு வட்டி விகிதம் 7 சதவீதம்.
  • இது 2023ம் ஆண்டு 31 மார்ச் 2023 அன்று முடிவடையும்.
ரூ.10 லட்சம் வரையில் கடன் வழங்கும் எஸ்பிஐ! மார்ச் 31,2023 கடைசி தேதி!  title=

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பான வட்டி விகிதத்துடன் ரூ.10 லட்சம் வரை பிணைய இலவச கடனை வழங்குகிறது.  எஸ்பிஐ எஸ்ஹெச்ஜி ஸமூஹ் சக்தி கேம்பெய்ன் மூலமாக தான் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இவ்வளவு பெரிய கடன் தொகை வழங்கப்படுகிறது.  இது அக்டோபர் 1, 2022 அன்று தொடங்கப்பட்டது, இது 2023ம் ஆண்டு 31 மார்ச் 2023 அன்று முடிவடையும்.  இந்த திட்டத்தின் மூலமாக  கிராமப்புற மகளிர் குழுவிற்கு ரூ.3 லட்சம் வரையிலான கடனுக்கு வட்டி விகிதம் 7 சதவீதம் ஆக உள்ளது.  

மேலும் படிக்க | Business Idea: வெறும் ரூ.5,000 முதலீட்டில் பெரிய அளவில் சம்பாதிக்கலாம்!

ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வட்டி விகிதம் 1 ஆண்டு எம்சிஎல்ஆர் மற்றும் ரூ.5 லட்சத்துக்கும் மேலான கடனுக்கு வட்டி விகிதம் 9 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கடன் வசதிகளை வழங்கி மகளிர் சுய உதவிக்குழுக்களை எஸ்பிஐ வங்கி மேம்படுத்துகிறது என்று வங்கி அதன் அதிகர்பூர்வ பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.  2022ம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, 8.71 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி சுமார் ரூ.24,023 கோடி கடனை வழங்கியுள்ளது.  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சுய உதவிக்குழுக்களில் உள்ளவர்களுக்கு வருமானம் ஈட்டும் வகையில் வீட்டுவசதி, கல்வி, திருமணம் மற்றும் கடன் போன்ற சமூகத் தேவைகள் போன்ற பல தேவைகளையும் பூர்த்தி செய்ய கடன்களை வழங்குகிறது.

ரிசர்வ் வங்கியின்படி, FIDD.GSSD.CO.BC. எண்.09/09.01.003/2021-22, 09 ஆகஸ்ட் 2021, DAY-NRLM-ன் கீழ் சுய உதவி குழுக்களுக்கான பிணைய இலவச கடன் ரூ. 10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதிர்ச்சியடைந்த சுய உதவிக்குழுக்களுக்கு வங்கியின் விருப்பப்படி சேமிப்பின் நான்கு மடங்குக்கு மேல் கடன்கள் வழங்கப்படலாம்.  ரூ.10 லட்சம் வரை கொடுக்கப்படும் கடனுக்கு மார்ஜின் எதுவும் விதிக்கப்படாது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடிப்படை ஊதியத்தில் ஏற்றம், மாத சம்பளத்தில் பம்பர் உயர்வு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News