வட்டி விகிதங்களை உயர்த்திய எஸ்பிஐ..உயரும் EMI!

எஸ்பிஐ வங்கி MCLR 0.20 சதவீதம் வரை உயர்த்தியதால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐகள் உயர்ந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 19, 2022, 03:07 PM IST
  • ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தியது.
  • 7.05 சதவீதமாக இருந்ததை தற்போது குறைந்தபட்சம் 7.55 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • கிரெடிட் ஸ்கோர் 750 முதல் 799 வரை இருந்தால், 7.65 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.
வட்டி விகிதங்களை உயர்த்திய எஸ்பிஐ..உயரும் EMI! title=

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாக உயர்த்திய பிறகு, எஸ்பிஐ தனது கடன் மற்றும் வைப்பு விகிதங்களை உயர்த்தியுள்ளது.  வீட்டுக் கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.55 சதவீதமாக உயர்த்தியுள்ளது.  இந்த உயர்வை தொடர்ந்து நிலையான வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் 800க்கு மேல் கிரெடிட் ஸ்கோரைக் கொண்ட கடனாளிக்கான குறைந்தபட்ச விகிதம் 7.55 சதவீதமாக உள்ளது.

மேலும் படிக்க | இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: இந்த வசதி இனி கிடைக்காது

வங்கி அதன் இணையதள பக்கத்தில், கடன் வழங்கும் நிறுவனம் அதன்  பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதத்தை (இபிஎல்ஆர்)  7.05 சதவீதமாக இருந்ததை தற்போது குறைந்தபட்சம் 7.55 சதவீதமாக உயர்த்தியுள்ளது.  மேலும் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து, ரிஸ்க் பிரீமியம் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளது.  நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் (எம்சிஎல்ஆர்) செலவை வங்கி 0.20 சதவீதம் வரை திருத்தியுள்ளது.  ஒரு வருடத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.20 சதவீதத்தில் இருந்து 7.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.  800 அல்லது அதற்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் உள்ள கடன் வாங்குபவர்களுக்கு வழக்கமான வீட்டுக் கடன்களுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.55 சதவீதம்.  

இதில் ரிஸ்க் பிரீமியம் பூஜ்யம், ரிஸ்க் பிரீமியம் சிபில் ஸ்கோரால் தீர்மானிக்கப்படுகிறது.  குறைந்த கிரெடிட் ஸ்கோர், அதிக ரிஸ்க் பிரீமியம் விகிதம் ஆகும். கிரெடிட் ஸ்கோர் 750 முதல் 799 வரை இருந்தால், 10 அடிப்படை புள்ளிகள் ரிஸ்க் பிரீமியத்துடன் 7.65 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.  இந்த கடன்கள் பெண் கடன் வாங்குபவர்களுக்கு 0.05 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.  ரீசெட் தேதி வந்தவுடன், கடன் வாங்குபவர்கள் கடன்களுக்கு அதிக வட்டி விகிதங்களைச் செலுத்த வேண்டும், அதாவது அதிக இஎம்ஐ-கள் அல்லது அவர்களின் கடன் காலத்தை நீட்டிக்க வேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 பம்பர் செய்திகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News