செப். 30ஆம் தேதிக்கு பின் ரூ. 2000 நோட்டுகள் என்னவாகும்?

2000 Rupee Notes: வரும் செப். 30ஆம் தேதிக்குள் மக்கள் தங்களிடம் உள்ள ரூ. 2000 தாள்களை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பின் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 28, 2023, 09:52 AM IST
  • ரூ. 2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ஆர்பிஐ அறிவிப்பு.
  • இந்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
  • கடந்த மே 23ஆம் தேதி, முதல் வங்கியில் ரூ. 2000 நோட்டுகள் மாற்றப்பட்டு வருகின்றன.
செப். 30ஆம் தேதிக்கு பின் ரூ. 2000 நோட்டுகள் என்னவாகும்? title=

2000 Rupee Notes: ரூ.2000 நோட்டை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதா இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்தது. இதை தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுகள்  முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுகின்றன. 

வரும் செப். 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ மத்திய வங்கி, மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ரூ. 2000 நோட்டுகள் தொடர்ந்து செல்லாது என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. அதாவது, ஒரு நபர் ரூ.2000 நோட்டைப் பயன்படுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கிக்கொள்ளலாம். அன்றாட வாழ்க்கையைப் பரிவர்த்தனையிலும் ரூ. 2000 நோட்டை பயன்படுத்தலாம். ஆனால், இவை செப். 30ஆம் தேதிக்கு பின் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.

செப். 30ஆம் தேதிக்கு பிறகு இந்த ரூ. 2000 நோட்டுகள் என்னவாகும் என்ற கேள்வி நிச்சயமாக மக்கள் மனதில் எழுந்துள்ளது. சமீபத்தில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் 30, 2023க்குப் பிறகு காலக்கெடு அல்லது சாத்தியமான காலக்கெடு நீட்டிப்புக்கான நடைமுறைக் கூறு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார். 

மேலும் படிக்க | ரூ. 2000 நோட்டை மாற்ற வங்கிக்கு செல்ல வேண்டாம்... கிராமப்புற மக்களுக்கு சிறப்பு வசதி!

2000 ரூபாய் நோட்டை மாற்றுவது மற்றும் டெபாசிட் செய்வது குறித்த வழிமுறைகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி தனது அறிவுறுத்தல்களில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியின் மேலும் அறிவுறுத்தல்களுக்கு காத்திருக்க வேண்டியது அவசியம். அக். 1ஆம் தேதிக்கு பின் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படலாம்.

செப். 30ஆம் தேதிக்கு 2000 ரூபாய் நோட்டுகளுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து ரிசர்வ் வங்கியால் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் சுமார் 4 மாத கால அவகாசம் உள்ளது, அவர்கள் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக்கொள்ளலாம். தற்போது, பொது மக்கள் ரூ.2000 நோட்டை மாற்றவோ அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவோ வங்கிகளுக்குச் செல்ல செப். 30ஆம் தேதி வரை காலக்கெடுவை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில், வரும் நாட்களில் ரூ.2000 நோட்டுகள் என்னவாகும், இதற்காக ரிசர்வ் வங்கியின் புதிய சுற்றறிக்கை காத்திருக்க வேண்டும், இதனால் இது குறித்த புதிய தகவல்களைப் பெற முடியும். தற்போது மக்கள் சார்பில் வங்கிகளுக்கு சென்று 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு அல்லது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | 2000 Rupee Note: வங்கியை தவிர வேறு எங்கெல்லாம் 2000 ரூபாய் நோட்டை மாற்றலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News