14ம் தேதி காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும் -மத்திய அரசு உறுதி

வரும் 14 ஆம் தேதி காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 10, 2018, 02:13 PM IST
14ம் தேதி காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும் -மத்திய அரசு உறுதி title=

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் தாக்கல் செய்தது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். 

காவிரி விவகாரம்: மன்னிக்க முடியாத துரோகத்தை செய்யும் மத்தி அரசு -ஸ்டாலின்

இதற்கிடையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பதில் அளிக்க மேலும் இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துறை செய்தது. மேலும் இந்த மனுவை மே 3 ஆம் விசாரணையின் போது விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், மத்திய அரசு சார்பில் கடந்த மே 2-ஆம் நாளே காவிரி விவகாரம் குறித்து பதில் அளிக்க இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

நீதிபதிகள் கூறியப்படியே, கடந்த மே 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுதும் மத்திய அரசு காவிரி வரைவுத்திட்டத்தினை தாக்கல் செய்யவில்லை. கர்நாட்டக தேர்தலை காரணம் காட்டி, தேர்தலுக்கு பின்பு வரைவு திட்டத்தினை தாக்கல் செய்வதாக கூறி அவகாசம் வேண்டும் என கோரியது. பின்னர் உச்சநீதிமன்றம், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது எனவும், அடுத்தகட்ட விசாரணை வரும் மே 8-ஆம் நாள் நடைபெறும் எனவும் தெரிவித்தது. 8 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு கால அவகாசம் வழங்கி, மீண்டும் விசாரணையை மே 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்நிலையில், வரும் 14 ஆம் தேதி காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுக்குறித்து நீர்வளத்துறை அமைச்சர் கூறியது, கர்நாடக தேர்தல் நாளை மறுநாள் நடக்க விருக்கிறது. அந்த தேர்தல் முடிந்தவுடன், உச்சநீதிமன்றம் உத்தரவின் படி வரும் 14 ஆம் தேதி காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் செய்யப்படும். மேலும் இனி நிச்சயாமாக அவகாசம் கேட்டக்கப் போவதில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

Trending News