தோலில் இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை!! நீரிழிவு நோயாக இருக்கலாம்

Diabetes Symptoms:உடலை நீரிழிவு நோய் தாக்கும் போது நம் உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.  அவற்றை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம், உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை தவிர்க்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 13, 2023, 04:34 PM IST
  • சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும்
  • தோலில் மஞ்சள் பருக்கள் அல்லது காயங்கள் தோன்றும்.
  • தொற்று அல்லது காயம் விரைவாக குணமடையாது.
தோலில் இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை!! நீரிழிவு நோயாக இருக்கலாம் title=

Diabetes Symptoms: இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் இதன் ஆபத்து அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டில் 10 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி கோடிக்கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர். இந்த நோயைத் தவிர்க்க, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். உடலை நீரிழிவு நோய் தாக்கும் போது நம் உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.  அவற்றை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம், உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை தவிர்க்கலாம்.

நீரிழிவு நோயின் அறிகுறிகள் ( Diabetes Symptoms)

நீரிழிவு நோயின் சில அறிகுறிகள் தோலில் தென்படுகின்றன. இந்த அறிகுறிகள் உயர் இரத்த சர்க்கரை காரணமாக உருவான நீரிழிவு நோயைக் குறிக்கின்றன. இருப்பினும், இவற்றை சரியான நேரத்தில் கண்டறிந்தால், சர்க்கரை நோயை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தலாம். இதில் கவனமாக இருப்பதன் மூலம் சிலர் வாழ்நாள் முழுவதும் உடலில் தங்கியிருக்கும் இந்நோயை தவிர்க்கலாம். சர்க்கரை நோயின் அறிகுறிகள் தோலில் எப்படி தோன்றும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும்

உங்கள் மென்மையான தோலில் திடீரென கருமையான, தடித்த திட்டுகள் தோன்ற ஆரம்பித்தால், தவறுதலாக கூட அவற்றை புறக்கணிக்காதீர்கள். இவை உடலின் மூட்டுகளிலும் தசைகளிலும் தெரியும். குறிப்பாக அக்குள், கழுத்து, முழங்கால்களை வளைக்கும்போது, ​​இடுப்பு மற்றும் மார்பகங்களின் கீழ் இவை தெரியும். இவை அனைத்தும் நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும். இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் ப்ரீ டயாபெடிக் நோயுடன் தொடர்புடையது. இது அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

தோலில் மஞ்சள் பருக்கள் அல்லது காயங்கள் 

உங்கள் தோலில் சிறிய மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பருக்கள் அல்லது காயங்கள் தோன்றினால், அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். இவை உயர் நீரிழிவு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறிக்கின்றன. இவை அரிப்பை உண்டாக்கும். இவை அதிகமாக தொந்தரவு செய்யலாம். இவை தோன்றினால் உடனே சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும். 

தொற்று அல்லது காயம் விரைவாக குணமடையாத நிலை

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோல் தொடர்பான பிரச்சனைகளால் (Skin Problems) அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் காயங்கள் குணமாக அதிக காலம் எடுக்கும். ஒரு சிறிய காயம் கூட ஆற அதிக நேரம் எடுக்கும். உயர் இரத்த சர்க்கரை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக, நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் உடலின் திறன் பலவீனமடைகிறது.

தோலில் கொழுப்பு

தோலின் கீழ் மஞ்சள் மற்றும் கொழுப்பு படிவு அதிகரிப்பு அதிக நீரிழிவு நோயைக் குறிக்கிறது. நீரிழிவு நோய் அல்லது டிஸ்லிபிடெமியா (இரத்தத்தில் உள்ள கொழுப்பு அமிலங்களின் அசாதாரண நிலைகள்) கட்டுப்பாட்டில் இல்லாத நபர்களுக்கு இது பொதுவாகும். 

மேலும் படிக்க | Uric Acid: இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாகிவிட்டதா? பிரச்சனையை தீர்க்க வழிகள் இவை

தோலில் செதில் திட்டுகள்

தோலில் உள்ள ஓவல், செதில் திட்டுகள் நீரிழிவு நிலைகளைக் குறிக்கின்றன. இது மிகவும் பொதுவான தோல் பிரச்சனைகளில் ஒன்றாகும். இவை குறிப்பாக ஆடுசதையில் தெரியும்.

கால்விரல்களில் தோல் இறுக்கம் 

கால்விரல்களைச் சுற்றியுள்ள இறுக்கமான மற்றும் அடர்த்தியான தோல் நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இது டிஜிட்டல் ஸ்க்லரோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது. இது டைப் ஒன் சர்க்கரை நோய் உள்ளவர்களிடம் அதிகம் தெரியும். இதனால், நடப்பதில் சிரமம் ஏற்படும். 

கைகளிலும் கால்களிலும் கொப்புளங்கள்

கைகள் அல்லது கால்களில் திடீரென கொப்புளங்கள் தோன்றுவது நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இந்த கொப்புளங்கள் திடீரென்று தோன்றும். இவற்றில் வலி இருக்கும். இந்த கொப்புளங்கள் குறிப்பாக கைகள் மற்றும் கால்களில் தெரியும். இந்த கொப்புளங்கள் வடுக்களை விட்டுச் செல்கின்றன. 

சருமத்தில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் தோன்றினால் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது அவசியமாகும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கண் நோய் எதுவும் அண்டாமல் இருக்க... தேவையான ‘சில’ ஊட்டச்சத்துக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News