Coronary Disease: ‘இந்த’ பழக்கங்கள் இதயத்திற்கு எதிரி; எச்சரிக்கும் நிபுணர்கள்!

Heart Health: தவறான உணவுப் பழக்கம்மற்றும் பிற பழக்கங்கள் காரணமாக, இதயத்தின் தமனிகளில் கொழுப்பு  குவிந்து, படிப்படியாக அடைப்பாக மாறத் தொடங்குகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 22, 2022, 03:35 PM IST
  • இதய ஆரோக்கியத்திற்கு தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்.
  • பொரித்த உணவுகள் சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது.
  • உயர் ரத்த அழுத்த பிரச்சனை மாரடைப்புக்கு காரணமாகிறது.
Coronary Disease: ‘இந்த’ பழக்கங்கள் இதயத்திற்கு எதிரி;  எச்சரிக்கும் நிபுணர்கள்! title=

இந்தியாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் மக்களே இதற்குக் காரணம். இதய நோய் பொதுவாக அதிக கொலஸ்ட்ரால் என்ற நிலையுடன் தொடங்குகிறது, இதன் காரணமாக இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. தவறான உணவுப் பழக்கம் காரணமாக, இதயத்தின் தமனிகளில் கொழுப்பு   குவிந்து, படிப்படியாக அடைப்பாக மாறத் தொடங்குகிறது. இதயத்திற்குச் செல்லும் ரத்தம் சரியான முறையில் செல்வதை இது தடுக்கிறது. இதன் காரணமாக இதயத்தின் அழுத்தம் அதிகரித்து, இதயம் தொடர்பான பல நோய்களுக்கு நாம் பலியாகிவிடுகிறோம்.  உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு, இதய தமனி நோய் ஆகியவற்றால் இதய ஆரோக்கியம்  கடுமையாக பாதிக்கப்படலாம்.

இதய ஆரோக்கியத்திற்கு தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்:

1. குளிர்பானங்கள்

நாம் புத்துணர்ச்சிக்காக, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்கிறோம். ஆனால் அதில் சோடாவின் அளவு அதிகமாக உள்ளது. இதனால் நம் இதயம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதனை அடிக்கடி எடுத்துக் கொள்வது இதய நோய் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.

2.. எண்ணெய் உணவுகள்

இந்தியாவில் பொரித்த உணவுகள் சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது. பொரித்த உணவுகள் அதிக சுவையானதாக இருந்தாலும், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதன் காரணமாக, இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அதே போல் ஃபாஸ்ட் ஃபுட் அல்லது ஜங்க் ஃபுட் சாப்பிட விரும்பினால், உடனே அதை நிறுத்துங்கள்.

மேலும் படிக்க | Heart Health: 'இந்த' உணவுகள் இதய அடைப்பை நீக்கும் சஞ்சீவினிகள்!

3. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

தற்போது பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடும் பழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. புரதம் கிடைக்கும் என்ற ஆசையில் இறைச்சியை உண்பவர்கள், இதனை அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் உப்பின் அளவு மிக அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்த பிரச்சனையை உண்டாக்கி, மாரடைப்புக்கு காரணமாகிறது.

4. சிகரெட் மற்றும் மது

சிகரெட் மற்றும் ஆல்கஹால் நமது நுரையீரல் மற்றும் கல்லீரலை சேதப்படுத்தும் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. இது பெரிய அளவில் உண்மை என்றலும், இது நம் இதயத்தையும் பாதிக்கிறது. இதன் காரணமாக, உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த கெட்ட பழக்கங்களை எவ்வளவு விரைவில் விட்டுவிடுகிறீர்களோ அவ்வளவு நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Migraine: ஒற்றைத் தலைவலிக்கு ‘குட் பை’ சொல்ல உதவும் சில யோகாசனங்கள்!

மேலும் படிக்க | நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க இந்த உணவை சாப்பிடுங்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News