உ.பி-யில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா...

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவின் முன்னணி மருத்துவமனையின் ஒரு மருத்துவர் சந்தேகத்திற்கிடமான மற்றும் நேர்மறையான கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த குழுவில் ஒரு பகுதியாக இருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Last Updated : Mar 18, 2020, 02:40 PM IST
உ.பி-யில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா... title=

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவின் முன்னணி மருத்துவமனையின் ஒரு மருத்துவர் சந்தேகத்திற்கிடமான மற்றும் நேர்மறையான கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த குழுவில் ஒரு பகுதியாக இருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

நகரின் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., பாதிக்கப்பட்ட மருத்துவரின் ரத்த மாதிரிகள் வைரஸுக்கு நேர்மறையான முடிவுகள் பெற்றுள்ளது. என்றபோதிலும் அவருடன் பணி குழுவில் இருந்த மற்ற 14 மருத்துவர்களுக்கு ரத்த மாதிரிகள் எதிர்மறையான முடிவினை வெளிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நேர்மறை மற்றும் சந்தேகத்திற்குரிய கொரோனா வைரஸ் நோயாளிகறை பரிசோதிக்க சென்ற மருத்துவர்களில் நேர்மறையாக பரிசோதிக்கப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஒரு நோயாளியிடமிருந்து நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு மருத்துவரின் வழக்கு கேரளா மற்றும் கர்நாடகத்தில் வெளிப்பட்டது. இந்நிலையில் தற்போது இதேப்போன்ற வழக்கு உத்திரபிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நோய்க்கு சாதகமான பரிசோதனை பெற்ற மருத்துவர்கள் பின்னர் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு அனுப்பப்பட்டனர் மற்றும் அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. உத்தரபிரதேசத்தில் புதன்கிழமை புதிய வழக்குடன், மாநிலத்தில் நேர்மறை சோதனை செய்தவர்களின் எண்ணிக்கையை 16-ஆக அதிகரித்துள்ளது. 

குறிந்த இந்த மருத்துவத் துறையில் பணியமர்த்தப்பட்ட மருத்துவர், கொரோனா வைரஸ் நேர்மறை மற்றும் சந்தேகத்திற்கிடமான நோயாளிகளுக்கு இரண்டு வாரங்களாக தனிமை / சிகிச்சை வார்டில் உள்ள நோயாளிகளுக்கு சென்று கொண்டிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மருத்துவமனையில் பத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட நேர்மறை கொரோனா நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News