நீங்கள் வாங்கும் பால் கலப்படம் அற்றது தானா; கண்டுபிடிப்பது எப்படி..!!

கலப்பட பால் மற்றும் செயற்கை பால், குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும். பால் தூய்மையானதா அல்லது கலப்படம் உள்ளதா என்பதை வீட்டிலேயே எளிதாக அடையாளம் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 8, 2021, 07:45 AM IST
நீங்கள் வாங்கும் பால் கலப்படம் அற்றது தானா; கண்டுபிடிப்பது எப்படி..!! title=

பால் என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் தேவைப்படும் அத்தியாவசியமான ஒரு பொருள். பால்  அருந்தும் பழக்கம் குழந்தைகள் முதியவர்கள் என அனைவருக்கும் உள்ளது.  ஆனால், கலப்படம் உள்ள பாலை அருந்துவதால், நமக்கு ஆரோக்கிய நன்மைகள் எதுவும் கிடைக்காது.  நாம் அனைவரும் பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு ஆளாக ஆரம்பித்து விடுகிறோம்.  அது மட்டுமல்ல, சில பவுடர் மற்றும் ரசாயனங்கள் மூலம் செயற்கை பால் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது கலப்படத்தை விட அதிக ஆபத்தானது. 

கலப்பட பால் மற்றும் செயற்கை பால், குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும். பால் தூய்மையானதா அல்லது கலப்படம் உள்ளதா என்பதை வீட்டிலேயே எளிதாக அடையாளம் காணலாம். 

அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் கலப்படம் அல்லாத உண்மையான பால் அடையாளத்தை அறிந்து கொள்வது அவசியம். பாலில் தண்ணீர் சேர்ப்பதோடு மட்டுமல்லாது, 10க்கும் மேற்பட்ட பல்வேறு பொருட்களை கலந்து செயற்கை பால் தயாரிக்கப்படுகிறது. இது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FASSI) அறிக்கையில் பலமுறை கூறப்பட்டுள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி,  தண்ணீரில் பால் பவுடரைக் கலந்து செயற்கை பால் தயாரிக்கப்படுகிறது. அதில் கொழுப்பு சத்திற்காக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் ஷாம்பு  பயன்படுத்தப்படுகின்றன என அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பால் நுரை வருவதற்கு வாஷிங் பவுடரும், வெண்மை நிறத்திற்கு வெள்ளை பெயிண்டும் கலக்கப்படுகிறது. பாலுக்கு இனிப்பைக் சேர்க்க குளுக்கோஸ் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் செயற்கை பால் தயாரிக்கப்படுகிறது.

​ALSO READ | Health Alert! சமைத்த உருளைகிழங்கை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பெரும் ஆபத்து.!!

1. செயற்கைப் பாலை கண்டறியும் முறை

செயற்கை பால் கசப்பான சுவை கொண்டது.
விரல்களுக்கு நடுவில் வைத்து தேய்க்கும்போது, ​​சோப்புக் கசிவு போல் இருக்கும். சூடுபடுத்தும்போது மஞ்சள் நிறமாக மாறும்.

2. தண்ணீர் கலப்படத்தை கண்டறியும் முறை

ஒரு மென்மையான மேற்பரப்பில் பாலை சொட்டு சொட்டு விடவும். துளி மெதுவாகப் பரந்து வெள்ளை தடயத்தை விட்டால் அது சுத்தமான பால். கலப்பட பால் என்றால் ஒரு தடயமும் இல்லாமல் வேகமாக பரவும்.

ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

3. ஸ்டார்ச் உள்ளதா என கண்டறியும் முறை

பாலில் சில துளிகள் அயோடின் சேர்க்கவும். கலக்கும்போது, ​​ஸ்டார்ச் இருந்தால் கலவையின் நிறம் நீலமாக மாறும்.

4. பாலில் உள்ள சோப்பு சேர்க்கப்பட்டுள்ளதா என அடையாளம் காணுதல்

ஒரு சோதனைக் குழாயில் 5-10 மி.கி பாலை எடுத்து வேகமாக குலுக்கவும். அதில் நுரை வர ஆரம்பித்தால், அதில் சோப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

இந்த செயற்கை பால், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு பெரும் விளைவிக்கும். தொடர்ந்து செயற்கை பால் குடிப்பதால் புற்று நோய் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். சுத்தமான பாலில் கால்சியம் உள்ளது, எலும்புகளை பலபடுத்தும், ஆனால் செயற்கை பால் எலும்புகளை பலவீனப்படுத்தும். மேலும் அதில் உள்ள இரசாயனம் குடல், கல்லீரலை சேதப்படுத்தும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பக்க விளைவுகள் அதிகம் ஏற்படும்.

குறிப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News