Tears: ‘கண்களில் ஏன் இந்த கண்ணீர்’: சுவாரஸ்ய தகவல்..!!

சோகம், துக்க உணர்வுகள் அதிகமாகும் போது, நம் கண்களிலிருந்து கண்ணீர் வரும். மனித உணர்வை வெளிப்படும் வகையில் வெளிப்படும் கண்ணீரில் பல வகைகள் உள்ளன என்றால் ஆச்சயர்மாக இருக்கிறதா...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 24, 2022, 11:09 AM IST
  • அழுவதால் பல நன்மைகள் உள்ளன.
  • மனித மூளையில் ஒரு லிம்பிக் அமைப்பு உள்ளது.
  • வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
Tears: ‘கண்களில் ஏன் இந்த கண்ணீர்’: சுவாரஸ்ய தகவல்..!! title=

சோகம், துக்க உணர்வுகள் அதிகமாகும் போது, நம் கண்களிலிருந்து கண்ணீர் வரும். மனித உணர்வை வெளிப்படும் வகையில் வெளிப்படும் கண்ணீரில் பல வகைகள் உள்ளன என்றால் ஆச்சயர்மாக இருக்கிறதா... நாம் அழும்போது ஏன் நம் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் பற்றி இன்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கண்ணீரில் மூன்று வகை 

கண்ணீரில் பல வகைகள் உள்ளன. விஞ்ஞானிகள் அவற்றை முக்கியமாக மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர். முதல் வகை அடிப்படைக் கண்ணீர். இந்த வகையில் கண்களை வறட்சியிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணர்ச்சியற்ற கண்ணீர் வருகிறது. இரண்டாவது பிரிவில் உணர்ச்சியற்ற கண்ணீரும் அடங்கும். இந்த கண்ணீர் ஒரு குறிப்பிட்ட வாசனையின் எதிர்வினையிலிருந்து வருகிறது. வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வருவதை நாம் அனைவரும் அறிவோம். மூன்றாவது அழும் போது வரும் கண்ணீர், இது உணர்ச்சி பூர்வமானது.

ALSO READ | நாக்கின் நிறமும் ஆரோக்கியமும்; ‘இந்த’ நிறங்கள் தீவிர நோயின் எச்சரிக்கை மணி!

கண்ணீர் வரும் காரணம்

மனித மூளையில் ஒரு லிம்பிக் அமைப்பு உள்ளது. இதில்  ஹைபோதாலமஸ் என்ற ரசாயனம் உள்ளது. இந்த பகுதி நரம்பு மண்டலத்துடன் நேரடி தொடர்பில் உள்ளது.  மகிழ்ச்சியோ, துக்கமோ, வலியோ  நமது மனமும் உடலும் தாங்க முடியாத அளவிற்கு அதிகமாக ஏற்பட்டால், இந்த ரசாயனத்தில் தானாக மாற்றம் ஏற்பட்டு நரம்பு மண்டலத்திற்கு தகவல் அனுப்புகிறது.

நரம்பியக் கடத்திகளால் சமிக்ஞை கிடைக்கும் நிலையில், உணர்ச்சி மேலிடும் போது நாம் அழுகிறோம். அழும் போது, ​​உடலில் பல வகையான எதிர்வினைகள் நடைபெறுகின்றன. இது மிக மகிழ்ச்சியான நேரத்திலும், துன்ப நேரங்களிலும் நடக்கும். இதன் காரணமாக, உடலில் பல வகையான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன, அட்ரினலின் அளவு மாற்றங்கள் உட்பட பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ALSO READ | Folic Acid: போலிக் அமிலம் ‘குழந்தை’ கனவை நனவாக்கும் வரப்பிரசாதம்..!!

அழுவதால் பல நன்மைகள் 

இது தவிர, அழுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதனால் கண்கள் மட்டுமின்றி மனநலமும் சிறப்பாக இருக்கும். உடலில் இருந்து வியர்வை மற்றும் சிறுநீர் வெளியேறும் போது உடலில் இருந்து நச்சுகள் வெளியேறுவதைப் போல , கண்ணீர் வந்தாலும் கண்கள் சுத்தமாகும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 

கண்ணீரில் 98 சதவீதம் நீர் உள்ளது, இது கண்களை சுத்தம் செய்து, நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. அதே சமயம்,  கண்ணீரில் மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் நச்சுகளின் அளவு அதிகமாக இருப்பதைக் காணலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். கண்ணீர் மூலம் மன அழுத்தம் விலகுவதால், அது மன ஆரோக்கியத்திற்கும், உடல ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News