தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்தநாள்: ஆடம்பர கொண்டாட்டங்களை விடுத்து பிரார்தனை செய்ய கோரிக்கை

உலகளாவிய வர்சுவல் கொண்டாட்டங்களைத் துவக்கிய அவரது ஆதரவாளர்கள், தங்களுக்கு பல வகைகளில் முன்னோடியாக இருந்து நல்வழியைக் காட்டியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2020, 01:39 PM IST
  • ஜூலை 6, 1935 இல், வடகிழக்கு திபெத்தில் உள்ள தாக்சர் குக்கிராமத்தில் தலாய் லாமா பிறந்தார்.
  • ஆடம்பரமான கொண்டாட்டங்கள் தேவை இல்லை - தலாய் லாமா
  • தனது தாயகத்தின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்காக செய்த அகிம்சை பிரச்சாரத்திற்காக 1989 ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்தநாள்: ஆடம்பர கொண்டாட்டங்களை விடுத்து பிரார்தனை செய்ய கோரிக்கை  title=

பௌத்த மதத் தலைவர் (Buddhist Spiritual Leader) தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்தநாளான இன்று அவரைப் பின்பற்றும் (Followers)  அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். உலகளாவிய வர்சுவல் கொண்டாட்டங்களைத் துவக்கிய அவரது ஆதரவாளர்கள், தங்களுக்கு பல வகைகளில் முன்னோடியாக இருந்து நல்வழியைக் காட்டியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். தன் இருப்பிடத்திலிருந்து ஒரு வீடியோ செய்தியை வெளியிட்ட தலாய் லாமா (Dalai Lama) அவர்கள், உலகம் தற்போது தொற்றின் பிடியில் இருப்பதால், தனது பிறந்த நாள் (Birthday) கொண்டாட்டங்களுக்காக மக்கள் ஒன்று கூட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

”ஆடம்பரமான கொண்டாட்டங்கள் தேவை இல்லை. நீங்கள் எனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பினால், மணி மந்திரத்தை (Prayers) (ஓம் மணி பத்மே ஹங்) குறைந்தது ஆயிரம் முறை ஓதிடுங்கள். நான் இதைக் கேட்பதற்கான காரணம் என்னவென்றால், திபெத்தியர்களுக்கு அவலோகிதேஸ்வரருடன் ஒரு தனித்துவமான தொடர்பு உள்ளது, "என்று அவர் கூறினார்.

"நான் இந்தியாவிற்கு வந்த பிறகு, நான் இங்கு தர்மசாலாவில் குடியேறிய பிறகு, சென்ரெசிக் வாடி சாங்போவின் சிலை மேற்கு திபெத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டது" என்று ஆன்மீகத் தலைவர் கூறினார். த்சோங்கர் சோட் மடாலயத்தின் துறவிகள் தர்மசாலாவிலிருந்து தென்னிந்தியாவுக்குச் செல்லும்போது, ​​சிலை அவர்களுடன் செல்ல வேண்டுமா அல்லது என்னுடன் இங்கே இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு எனக்குத் தோன்றிய கணிப்பஒ நான் செய்தேன், "என்று அவர் மேலும் கூறினார்.

"வாடி சாங்போ என்னுடன் இங்கே இருந்தது.  நான் அவருடைய பராமரிப்பாளராக பணியாற்றுகிறேன். அவர் என்னைப் பார்த்து புன்னகைக்கிறார் என்று சில சமயங்களில் நான் உணர்ந்ததுண்டு.” என்று அவர் தெரிவித்தார்.

பாரம்பரிய ஆடைகளை அணிந்துகொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறவிகள் தங்களது ஆன்மீகத் தலைவரின் 85 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தர்மஷாலாவில் உள்ள முக்கிய கோயிலான சுக்லகாங்கில் கலந்து கொண்டனர். "அவரது புனிதத்தன்மையின் நீண்ட ஆயுளுக்காக சிறப்பு பிரார்த்தனை அமர்வுகள் நடத்தப்பட்டன, அதில் துறவிகள் மட்டுமே பங்கேற்றனர்" என்று செய்தி நிறுவனம் IANS மத்திய திபெத்திய நிர்வாகத்தின் (CTA) செய்தித் தொடர்பாளரை மேற்கோளிட்டுள்ளது. எந்த வித பொதுக்கூட்டமும் நடக்கவில்லை. அனைவரும் வர்சுவல் முறையில் பிரார்த்தனைகளில் பங்கேற்றனர்.

ஜூலை 6, 1935 இல், வடகிழக்கு திபெத்தில் உள்ள தாக்சர் குக்கிராமத்தில் பிறந்த தலாய் லாமா தனது இரண்டு வயதில் 13 வது தலாய் லாமா, துப்டன் கயாட்சோவின் மறுபிறப்பாக அங்கீகரிக்கப்பட்டார். 1959 இல் சீன ஆட்சிக்கு எதிரான தோல்வியுற்ற எழுச்சியிக்கு பின்னர் அவர் திபெத்தை விட்டு வெளியேறினார். அப்போதிருந்து, அவர் திபெத்துக்கு சுயாட்சியைக் கோரி போராடி வருகிறார்.

தலாய் லாமா, தனது தாயகத்தின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்காக செய்த அகிம்சை பிரச்சாரத்திற்காக 1989 ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். இருப்பினும், சீனர்கள் திபெத்தை சீனாவிலிருந்து பிரிப்பதில் குறியாக இருக்கும் ஒரு விரோதியாக அவரை கருதுகின்றனர்.

ALSO READ: COVID-19 தொற்றுநோய்: அமர்நாத்தில் முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட ஆர்த்தி

Trending News